'முதல் முறையாக வாங்கினேன்': ஓணம் பம்பரில் ரூ25 கோடி தட்டித் தூக்கிய பெயிண்ட் நிறுவன ஊழியர்

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் நெட்டூரைச் சேர்ந்த ஒரு பெயிண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தனது வாழ்க்கையில் முதன்முதலாக வாங்கிய ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது. எதிர்பாராத இந்த அதிர்ஷ்டத்தால் ஒரே நாளில் அவருடைய வாழ்க்கை மாறிப்போயுள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் நெட்டூரைச் சேர்ந்த ஒரு பெயிண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தனது வாழ்க்கையில் முதன்முதலாக வாங்கிய ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது. எதிர்பாராத இந்த அதிர்ஷ்டத்தால் ஒரே நாளில் அவருடைய வாழ்க்கை மாறிப்போயுள்ளது.

author-image
WebDesk
New Update
Onam pumper 2025

ஓணம் பம்பர் லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி கண்டுபிடிக்கப்பட்டார். ஆழப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ்.நாயர் என்பவருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி கிடைத்துள்ளது.

ஓணம் பம்பர் லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி கண்டுபிடிக்கப்பட்டார். ஆழப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ்.நாயர் என்பவருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி கிடைத்துள்ளது. 

Advertisment

இவர் கேரளாவில் உள்ள நெட்டூரில் உள்ள நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார். நெட்டூரிலிருந்துதான் இவர் டிக்கெட்டை வாங்கியுள்ளார். துறவூர் தைக்காட்டுச்சேரி எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் அவர் டிக்கெட்டைச் சமர்ப்பித்தார். இதுவே தான் வாங்கும் முதல் ஓணம் பம்பர் லாட்டரி என்றும், இது எதிர்பாராத அதிர்ஷ்டம் என்றும் சரத் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நெட்டூரைச் சேர்ந்த லாட்டரி ஏஜென்ட் எம்.டி. லதீஷ் விற்ற TH 577825 என்ற டிக்கெட்டுக்குத்தான் இந்த முறை ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு கிடைத்தது. திருவனந்தபுரம் ஆற்றுங்கல் பகவதி ஏஜென்சியின் வைட்டிலா கிளையிலிருந்து சரத் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

ஓணம் பம்பர் வெற்றியாளர் எஸ்.பி.ஐ. துறவூர் கிளையில் டிக்கெட்டை ஒப்படைக்கிறார்.

Advertisment
Advertisements

கடந்த மாதம் 27-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திருவோணம் பம்பர் குலுக்கல், எதிர்பாராத கனமழை, ஜி.எஸ்.டி. மாற்றம் மற்றும் ஏஜென்டுகள், விற்பனையாளர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு இந்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருவோணம் பம்பர் லாட்டரியின் 75 லட்சம் டிக்கெட்டுகள் இந்த ஆண்டு அச்சிடப்பட்டு விற்கப்பட்டன.

மாவட்ட அளவில், பாலக்காட்டில் அதிகபட்சமாக 14,07,100 டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.திரிச்சூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும் (9,37,400 டிக்கெட்டுகள்), திருவனந்தபுரம் மூன்றாம் இடத்திலும் (8,75,900 டிக்கெட்டுகள்) விற்பனை நடைபெற்றது.

lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: