onion price today vegetable price : ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தற்போது சரக்குப் போக்குவரத்து மற்றும் சந்தை விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் தேவையான அளவுக்கு காய்கறிகளின் வரத்து உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயர்வு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று விலையேற்றம் காணப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் அதே இடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டது முதல் வழக்கம் போல் காய்கறிகள் வந்து கொண்டிருக்கிறது. தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வருகிறது. இருந்த போதிலும் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
முட்டைகோஸ் 15லிருந்து 20, கேரட் 50லிருந்து 65, பீன்ஸ்ட் 25, சின்ன வெங்காயம் 100, பச்சை மிளகாய் 25லிருந்து 30, உருளைக்கிழங்கு43, பாகற்காய் 30லிருந்து 35, சேனைக்கிழங்கு 30லிருந்து 35, சேப்பக்கிழங்கு15, இஞ்சி 60லிருந்து 90, அவரைக்காய் 40லிருந்து 60 என விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் தக்காளி 30, வெண்டைக்காய்20,, புடலைங்காய் 20 என்று அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
காய்கறிவிலை உயர்வுக்கு முக்கிய காரணம் டீசல் விலை அதிகரிப்பே ஆகும்.மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை உயர்வு. இதனை வாங்கி சில்லரையில் விற்பவர்கள் கிலோவுக்கு 10 முதல்15வரை கூடுதலாக விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”