/tamil-ie/media/media_files/uploads/2021/11/Paytm-Google-Pay.jpg)
இரண்டு நாட்களில், நிறுவனத்தின் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.17,378.41 கோடி குறைந்து ரூ.30,931.59 கோடியாக உள்ளது.
Paytm Crisis | Vijay Shekhar Sharma Meets Finance Minister | மூன்று முறை சரிவுக்குப் பிறகு, ஃபின்டெக் தளமான பேடிஎம் (Paytm) பங்குகள் வியாழக்கிழமை (பிப். 7) கிட்டத்தட்ட 10 சதவிகிதம் முன்னேறியது.
தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் பங்குகள் 43.35 புள்ளிகள் அல்லது 9.61 சதவீதம் உயர்ந்து 494.50 ஆக இருந்தது, கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
முன்னதாக, பேடிஎம் பங்குகள் வியாழன், வெள்ளி மற்றும் திங்கள் வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட 42 சதவீதம் சரிந்தன. இதன்பிறகு இன்று 496.25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மார்ச் 1 முதல் புதிய டெபாசிட்கள் மற்றும் டாப்-அப்களைத் தடுக்கும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்குப் பிறகு பேமென்ட் பிளாட்பார்ம் அதன் பங்கு விலை முறையே 20 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் சரிந்தது.
ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கையின் பின்னணியில் "தொடர்ச்சியான இணக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான பொருள் மேற்பார்வை கவலைகள்" என்று குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய் சேகர் சர்மா சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கி சில தளர்வுகளை விளக்கியதாகக் கூறப்படும் செய்திகளின் பின்னணியில் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது.
பேடிஎம் தனது பயனர்களுக்கு ரிசர்வ் வங்கியின் காலக்கெடுவுக்குப் பிறகும் சேவைகளைத் தொடர்வதாக உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.