பெர்சனல் லோன்கள், அன்செக்யூர்ட் கடன் என்பதால் அதிக வட்டி விகிதத்தை கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.
எனவே, வெவ்வேறு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து, கடன் வாங்குபவர்களுக்கு சிறந்த சலுகையை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுப்பது முக்கியம். அந்த வகையில், இந்த ஜூலை மாத நிலவரப்படி, முக்கிய வங்கிகளின் தனிநபர் கடன் வட்டி விகிதங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆண்டுக்கு 10.90 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. இது தவிர, கடன் வாங்குபவர்கள் ரூ. 6,500 மற்றும் ஜி.எஸ்.டி- யை செயலாக்கக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: இங்கு, 10.80 சதவீதம் முதல் 16.50 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. அத்துடன், கடன் தொகையில் 2 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படும்.
கோடக் மஹிந்திரா வங்கி: வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 10.99 சதவீதம் முதல் தொடங்குகின்றன. கடன் செயலாக்கக் கட்டணங்கள் ஆண்டுக்கு 5 சதவீதம் வரை இருக்கும்.
ஃபெடரல் வங்கி: இந்த வங்கி, தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 11.49 சதவீதம் முதல் 14.49 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
எஸ்.பி.ஐ: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.30 சதவீதம் முதல் 15.30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
பேங்க் ஆஃப் பரோடா: இந்த பொதுத்துறை வங்கி தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 13.05 சதவீதம் முதல் 18.30 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: இந்த பொதுத்துறை வங்கி தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.75 சதவீதம் முதல் 14.45 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.