சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் , வெள்ளி விலை உயர்வதை விட பெட்ரோல், டீசல் விலையின் உயர்வு பொதுமக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 76 ரூபாயை எட்டியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
அதன்பின்பு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் புதிய முறை அமலுக்கு வந்தது. இதில் நாளுக்குள் மாறும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் காணப்படுவது பொதுமக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ரூ. 76 தாண்டியுள்ளது. கடந்த 2013 ஆண்டில் செப்டம்பர் மாதம் லிட்டர் பெட்ரோல், 79.55 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே உச்ச விலையாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, மூன்று ஆண்டுகள் பின்பு பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.