/tamil-ie/media/media_files/uploads/2019/09/epfo.jpg)
Pf,rules, interest,apply, பிஎஃப், சேமிப்பு,
pf rules and regulation : தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் இருந்து PF பிடிப்பது பொதுவான நடைமுறை.எதிர்காலத்தில் ஏற்படும் அவசர தேவைக்காக தொழிலாளர்களின் கணக்கில் அந்த பணம் வைப்பில் இடப்படும்.
பிஎஃப் எடுத்தல் மற்றும் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு e-inspection system என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமும் செய்ய இருக்கிறது.
மாத சம்பளக்காரர்களுக்கு இது வருங்காலத்தில் எவ்வளவு பெரிய சேமிப்பு என்பதை பற்றிய தான பதிவுதான் இது.
1. ஒருவர் தனது 25 வயதில் வேலையில் சேரும் போது ஒரு நிதியாண்டில் அவர் / அவள் பிபிஎப்பில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ .1.5 லட்சம் ஆகும். அந்த நபர் தனது ஓய்வூதிய வயது 60 வரை தனது / அவரது வாழ்க்கை முழுவதும் பிபிஎப்பில் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் முதலீடு செய்ய முடிகிறது.
2. இவ்வாறு வைப்பிலிடப்படும் பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள்.பிபிஎஃப் வட்டி விகிதம் ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படுகிறது. 7.9 சதவீத வட்டிக்கு ரூ .1.5 லட்சம் முதலீடு 35 ஆண்டுகளில் சுமார் 2.9 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். எனவே 25 வயதில் நீங்கள் பிஎஃப் சேமிக்க தொடங்கினால் உங்களால் 3 கோடி வரை பெற முடியும்.
3. ஒரு நபர் அவருடைய முழு முதலீட்டு காலத்தில் மொத்த வட்டி வீதத்தைப் பொறுத்து இறுதித் தொகை கூடியோ அல்லது குறைந்தோ செல்லலாம்.
மேலும் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி கீழ் வரி விதிக்கப்படுவதில்லை. பிரிவு 80 சிக்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம். சம்பாதித்த வட்டி மற்றும் பிபிஎஃப் நிறுவனத்திலிருந்து முதிர்ச்சியிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.