பிரதமர் கிசான் திட்டம்; விவசாயிகள் இதைச் செய்யாவிட்டால் 10-வது தவணை கிடைக்காது!

பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள், தங்கள் விவரங்களை E-KYC செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இல்லாவிட்டால் உங்களுக்கு 10 ஆவது தவணைத் தொகை கிடைக்காது

பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள், தங்கள் விவரங்களை E-KYC செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இல்லாவிட்டால் உங்களுக்கு 10 ஆவது தவணைத் தொகை கிடைக்காது

author-image
WebDesk
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

PM Kisan 10th installment will not arrive without E-KYC: பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணைக்காகக் காத்திருக்கும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. விரைவில், பிஎம் கிசான் திட்டத்தின் 10வது தவணை வெளியிடப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் தவணை வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் செய்தியும் பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஆண்டிற்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2000 விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகளின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் நிலப் பதிவேடு விவரங்கள் உள்ளன.

இதற்கிடையில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் இ-கேஒய்சி (E-KYC) செய்ய வேண்டியது கட்டாயம் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஊழலை தடுக்க மத்திய அரசு இதனை தொடங்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் இ-கேஒய்சியை நீங்கள் முடிக்கவில்லை என்றால், ஜனவரி 1 ஆம் தேதி தவணையாக ரூ.2,000 கணக்கில் வராது.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பணம் உங்கள் கணக்கில் வருமா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம், பட்டியலில் உங்கள் பெயரை எளிதாகச் சரிபார்க்கலாம்.

Advertisment
Advertisements

1. PM Kisan Yojana இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in க்குச் செல்லவும்.

2. விவசாயிகள் கார்னர் (Farmer’s Corner section) என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.

3. விவசாயிகள் கார்னர் பிரிவில், பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

5. 'Get Report' என்பதைக் கிளிக் செய்யவும்.

6. பயனாளிகளின் முழுமையான பட்டியல் தோன்றும், அதில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் தவணை நிலையைச் சரிபார்க்க

1. உங்கள் தவணையின் நிலையைப் பார்க்க, PM Kisan இன் இணையதளத்தைப் பார்வையிடவும்.

2. வலதுபுறத்தில் விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்யவும்.

3. பயனாளி நிலை (Beneficiary status) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. இப்போது உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும்.

5. உங்கள் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிடவும்.

6. இதற்குப் பிறகு உங்கள் நிலையைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Kisan Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: