PM Kisan: ஆண்டுக்கு ரூ 6000 மத்திய அரசு உதவி; உங்க ஆதார் நம்பரை அப்டேட் செய்தாச்சா?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், கட்டாய eKYC ஐ இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 31 ) முடிவடைகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், கட்டாய eKYC ஐ இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 31 ) முடிவடைகிறது.

author-image
WebDesk
New Update
PM Kisan Update

பிரதான் மந்திரி கிஷான் திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் தகுதியுள்ள விவசாயிகள், அவர்கள் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பலன்களைப் பெற, கட்டாய E-KYC ஐ முடிக்க இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்த கட்டாய eKYC பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 உடன் நிறைவடைகிறது. ஆகவே இன்னும் eKYC முறைப்படி முடிக்காத விவசாயிகள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவ்வாறு செய்ய வேண்டும்.

Advertisment

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது.

அதன்படி, PM KISAN அதிகாரப்பூர்வ இணையதளம் பின்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அவை,

  1. PM KISAN பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயம். OTP அடிப்படையிலான eKYC PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது.
  2. பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYCக்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.
  3. PM KISAN பயனாளிகளுக்கான eKYC இன் காலக்கெடு 31 ஆகஸ்ட் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements

உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP அடிப்படையிலான EKYC கீழே உள்ள https://exlink.pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற இணைப்பில் கிளிக் செய்யலாம்.

ஆதார் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

மேலே குறிப்பிட்ட PM Kisan இணையதளத்தைப் பார்வையிடவும். அங்கு, eKYC பக்கத்தை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஆதார் எண்-ஐ உள்ளீடு செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 4 இலக்க OTP ஐ பெறுவீர்கள்.
பின்னர் சமர்ப்பி OTP என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து, ஆதார் ஓடிபி எண்ணை உள்ளீடவும். உங்கள் ஆதார் எண் பதிவேற்றம் நிறைவடையும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 11ஆவது தவணை நிதிப் பலனை பிரதமர் நரேந்திர மோடி மே 31 அன்று விடுவித்தார். 10 கோடிக்கும் அதிகமான பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.21,000 கோடி சென்றடைந்தது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் 2019 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 மாதங்களுக்கு ஒரு முறை 4 தவணையாக பிரித்து பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: