Advertisment

பொங்கல் பண்டிகை: வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை; இதையும் தெரிஞ்சுக்கோங்க

பொங்கல் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு இன்று (ஜன.13) முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
No ID proof requisition slip needed to exchange Rs 2000 notes says SBI
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Advertisment

ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில், இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனவரி 13-ம் தேதி வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை விடுமுறை,  ஜனவரி 14 பொது விடுமுறை, ஜனவரி 15 பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத் தேவைகளை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment