/tamil-ie/media/media_files/uploads/2023/03/small-saving-rates-re-l.jpg)
Post office FD vs bank FDs
நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக நடுத்தர வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் விருப்பமான முதலீட்டு முறையாகும்.
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு நிலையான வைப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது.
அந்த வகையில், நிலையான வைப்புத் திட்டங்கள் ஒரு நிதி கருவியாக பிரபலமாக உள்ளன. ஏனெனில் அவை ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தின்படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.
மேலும், வழக்கமான சேமிப்புக் கணக்குகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மேலும், வைப்பாளர்கள் தங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்து, சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகையின் காலம் அல்லது காலவரையறையையும் தேர்வு செய்யலாம்.
அஞ்சல் அலுவலக நிலையான வைப்பு
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தபால் அலுவலக கால வைப்புகளின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அதிகரித்துள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கான தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகையின் விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும் அதே வேளையில், மூன்று வருட FD மீதான விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகையானது பொது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வருமானத்தை அளிக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் இந்த நிலையான வைப்புகளில் 0.5 சதவீதம் கூடுதலாகப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.