Advertisment

தபால் துறை சூப்பர் ஆஃபர்... வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு!

நீங்கள் விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்துவிடுவார்.

author-image
WebDesk
New Update
தபால் துறை சூப்பர் ஆஃபர்... வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு!

Post Office News : வெறும் ரூ. 5000 முதலீட்டில் லாபகரமான பலன்களை பெற தபால் நிலையங்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது. தபால்நிலைய அவுட்லெட்டிற்கான ஃபிரான்சைஸ் மற்றொன்று தபால்நிலைய முகவர்கள் என இவ்விரண்டில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றில் நீங்கள் முதலீடு செய்யலாம். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாக சென்று போஸ்டல் ஸ்டாம்புகள் மற்றும் எழுதுப்பொருட்களை வழங்கும் நபர் போஸ்டல் ஏஜெண்ட்டுகள் அல்லது தபால் முகவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Advertisment

வெறும் ரூ. 5000 மூலம் இதில் ஏதோ ஒன்றில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். இந்த ஃப்ரான்சைஸை பெற்ற பிறகு நீங்கள் கமிஷன் பணம் சம்பாதிக்க முடியும். ஆனாலும் உங்களின் உழைப்புக்கு ஏற்ற வகையில் உங்களின் வருவானம் மாறும்.

யாரெல்லாம் பிரான்சைஸ் அவுட்லெட்டை பெற முடியும்?

18 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும். இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். இந்தியா போஸ்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு ஃபிரான்சைஸை பெற முடியும்.

விண்ணப்பதாரர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை ஒரு வரையறுக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஒரு வணிகத் திட்டத்துடன் ஃபிரான்சைஸ் அவுட்லட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விவரிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை தபால் நிலையத்திலிருந்து பெறலாம் மற்றும் விரிவான முன்மொழிவுகளின் நகல்களுடன் உரிமையாளர் விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்துவிடுவார்.

ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு ரூ. 3, ஸ்பீட் போஸ்ட்டுக்கு ரூ. 5, ரூ. 100 முதல் ரூ. 200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ. 3.50, ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு ரூ. 5, 1000க்கும் மேற்பட்ட புக்கிஙிகள் மற்றும் ஸ்பீட் போஸ்டுகளுக்கு மாதம் 20% கூடுதல் கமிஷன், ஒரு தபால் தலை, தபால் நிலையம் மற்றும் பணம் ஆர்டர் விற்பனை செய்யப்பட்ட தொகையில் 5% ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment