/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1586.jpg)
நகல் பாஸ்புக் வழங்க, 50 ரூபாய் செலுத்த வேண்டும்
Post Office Savings Scheme | Sbi Bank | இந்தியாவில், அஞ்சலக சேமிப்பு கணக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த சேமிப்புக் கணக்குகளில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதலீடு செய்தால் போதுமானது.
ஒருவர் ஒரே கணக்கு அல்லது கூட்டுக் கணக்காக (இரண்டு பெரியவர்கள் மட்டும்) கணக்கை திறக்க முடியும். இதுதவிர, ஒரு பாதுகாவலர் மைனருக்கான கணக்கையும் திறக்கலாம்.
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டாலும், வங்கிகள் அவ்வப்போது வட்டி கொடுக்கின்றன, ஆனால் இந்த வட்டி பொதுவாக 2.70 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இருக்கும். இருப்பினும், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வங்கிகளை விட சிறந்த வட்டியை வழங்குகிறது.
வட்டி விகிதம்
- அஞ்சல சேமிப்பு கணக்கு 4.00
- எஸ்பிஐ சேமிப்பு கணக்கு 2.70
- ஐசிஐசிஐ சேமிப்பு கணக்கு 3.00- 3.50
- ஹெச்டிஎஃப்சி சேமிப்பு கணக்கு 3.00- 3.50
- பேங்க் ஆஃப் பரோடா சேமிப்பு கணக்கு 2.90
- பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்பு கணக்கு 2.70
கட்டணங்கள்
ஒரு அஞ்சலக சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை ஒரு நிதியாண்டின் முடிவில் குறைந்தபட்ச வரம்பான ரூ.500க்குக் குறைவாக இருந்தால், பராமரிப்புக் கட்டணமாக ரூ.50 கழிக்கப்படும்.
நகல் பாஸ்புக் வழங்க, 50 ரூபாய் செலுத்த வேண்டும். கணக்கு அறிக்கைகள் அல்லது டெபாசிட் ரசீதுகளை வழங்க, ஒவ்வொன்றும் ரூ.20 செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.