தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். மேலும் அவை சிறந்த வருமானத்தை வழங்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் மிகக் குறைந்த பணத்தில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இது தவிர, உங்கள் பணமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் மாதத்திற்கு ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டியுடன் இது உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
கணக்கைத் திறப்பது மாதத்தின் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் இருந்தால், ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஒரு மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், மாதத்தின் கடைசி வேலை நாளில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முறையாக டெபாசிட் செய்யாவிட்டால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நீங்கள் டெபாசிட் செய்யாமல் இருந்தால் உங்களது சேமிப்புக் கணக்கு மூடப்பட்டுவிடும். அப்படி கணக்கு மூடப்பட்டுவிட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே அதை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் முன்கூட்டியே டெபாசிட் செய்தால், சில தள்ளுபடிகள் கிடைக்கும். ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே டெபாசிட் செய்தால், மாதாந்திர பிரீமியத்தில் 10 சதவீத தள்ளுபடி இருக்கும். ஒருவர் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயை டெபாசிட் செய்தால், 6,000 ரூபாய்க்கு பதிலாக 5,900 ரூபாயை ஆறு மாதங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கு மொத்த தொகையை டெபாசிட் செய்தால், அவருக்கு மாதாந்திர பிரீமியத்தின் 40 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். இதனால், ஒரு வருடத்திற்கான மொத்த வைப்புத்தொகை ரூ.12,000 க்கு பதிலாக ரூ.11,600 ஆக இருக்கும்.
கணக்கு தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு கடன் பெறலாம். அதை மொத்தமாக அல்லது தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். தொடர்ச்சியான வைப்பு வட்டிக்கு வட்டி விகிதம் தனித்தனியாக 2 சதவீதமாக இருக்கும். இந்தக் கணக்கு 5 வருடங்களுக்கு இருக்கும். ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையாமல் மூடப்படலாம்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் உங்களால் லட்சாதிபதி ஆகிவிட முடியும். தற்போது கிடைக்கும் 5.8 சதவிகித வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ .10,000 ஐ தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்தால், உங்கள் பணம் முதிர்வு காலத்தில் ரூ.6,96,967 ஆக அதிகரிக்கும். 5 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை ரூ.6 லட்சமாகவும், வட்டித் தொகை ரூ.99,967 ஆகவும் இருக்கும். இதனால், முதிர்வு தொகை சுமார் ரூ.7 லட்சம் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil