Post Office Savings Schemes List : அஞ்சல் துறை பல நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மென்மேலும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில், பயன் தரும் வகையில் பல திட்டங்களை அது உருவாக்கியுள்ளது.
Post Office Savings Schemes List
அஞ்சலக சேமிப்புக் கணக்கு, 5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), அஞ்சலக டெர்ம் டெபாசிட், அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு
இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கின்றன என பார்க்கும் போதும், முதலாவதாக அஞ்சலக சேமிப்புக் கணக்கு - வெறும் 20 ரூபாயில் திறக்கக்கூடியது. இது வங்கிக் கணக்கு போன்ற சேமிப்புக் கணக்கு என்றாலும் முன்னிலை வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கும் போது இது 4 % வட்டி விகித லாபம் வழங்குகின்றது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய். இணையதள வங்கி மற்றும் செக் புக் போன்ற வசதிகளும் இதில் கிடைக்கும். அடுத்து 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும் திட்டமாக 5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி கணக்கு காணப்படுகின்றது.
ரெக்கரிங் டெபாசிட் கணக்கு
மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும். 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 7.3 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கின்றது.
அஞ்சலக டெர்ம் டெபாசிட்
வங்கிகள் அளிக்கும் நிலையான வைப்புத் திட்டத்தை அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இதில் ஒரு வருடம் முதலீடு செய்யும் போது 7.0 %, 2 வருடம் முதலீடு செய்யும் போது 7 %, 3 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 7 % லாபமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 %லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் வைப்புச் செய்து கணக்கைத் திறக்கலாம்.
அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம்
இதேபோல் மாதாந்திர வருவாய் திட்டமான அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டத்தில், 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 5 வருடத்திற்குப் பிறகு 7.3 % லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவனை முறையில் திரும்பப் பெற முடியும். ஆனால் இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யக்கூடிய திட்டமான மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில், 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். 8.7 % லாபம் கிடைக்கக்கூடிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்
பிபிஎப்: பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 8 சதவீத வட்டி % லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை வைப்பிலிடலாம்.
தேசிய சேமிப்புப் பத்திரம்
அதேபோல் 5 வருடம் முதல் 10 வருடம் வரை மொத்தமாக ஒரு தொகையை தேசிய சேமிப்புப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தால் 8 % லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யக்கூடிய இந்த திட்டத்தில் முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.
இதர திட்டங்கள்
அடுத்து கிசான் விகாஸ் பத்ரா என்ற திட்டத்தின் கீழ் 7.7 சதவீத வட்டி % லாபத்தில் 112 மாதங்களுக்கு முதலீடு செய்யும் போது இரட்டிப்பாக லாபம் கிடைக்கும்.
மேலும் செல்வ மகள் திட்டம் என்ற பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்புத் திட்டத்தில், ஆண்டுக்கு 8.5 % வரி % லாபம் கிடைக்கும். தொடர்ந்து 15 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.
பெண் குழந்தையின் வயது 21 வயது நிரம்பிய பின் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தானாக மூடப்படும். ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை 12 தவணைகளாக முதலீடு செய்யலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.