Advertisment

Post Office Scheme: நம்புங்க... இத்தனை மாதங்களில் உங்க பணம் டபுள் ஆகும்!

Post office scheme double your money investment: தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நீங்கள் முதலீடு செய்த மூலதனத்தை 124 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது.

author-image
WebDesk
New Update
Post Office scheme; 5 ஆண்டுகளில் ரூ14 லட்சம்... இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமை தெரிஞ்சுக்கோங்க!

உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கும் எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கும் பாதுகாப்பான திட்டம்  ஒன்றை தபால் அலுவலகம் வழங்குகிறது. அது கிசான் விகாஸ் பத்ரா திட்டமாகும். இது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை தரும் திட்டமாகும்.

Advertisment

தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நீங்கள் முதலீடு செய்த மூலதனத்தை 124 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது. எனவே, நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாக திரும்பக் கிடைக்கும்.

தபால் அலுவலக சேமிப்பு திட்டமான கிசான் விகாஸ் பத்ராவின் வட்டி விகித விவரங்கள்

தபால் அலுவலக சேமிப்பு திட்டம் கிசான் விகாஸ் பத்ரா உங்களுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தபால் அலுவலக திட்டமான கிசான் விகாஸ் பத்ராவில் யார் முதலீடு செய்யலாம்?

18 வயது நிரம்பிய யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். மேலும் மைனர் சார்பாக அல்லது மனவளர்ச்சி குன்றிய நபரின் சார்பாக ஒரு பாதுகாவலர்  மற்றும் 10 வயதிற்கு மேற்பட்ட ஒரு மைனர் தனது பெயரில் கணக்கை தொடங்கலாம்.

3 பெரியவர்கள் வரை கூட்டாகவும் கணக்கைத் திறக்கலாம்.

திட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானலும் திறக்க முடியும்.

அதிகபட்ச வைப்பு வரம்பு இல்லாத நிலையில், ஒருவர் குறைந்தபட்சம் ரூ .1000 மேலும்  ரூ .100ன் மடங்குகளில்  டெபாசிட் செய்ய ஆரம்பிக்கலாம்.

உங்கள் வைப்புத் தொகை நிதி அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முதிர்வு காலத்தில் நீங்கள் முதலீடு செய்த நாளிலிருந்து முதிர்ச்சியடையும்.

முதிர்ச்சியடையும் முன் எந்த நேரத்திலும் உங்கள் கிசான் விகாஸ் பத்ரா கணக்கை முன்கூட்டியே மூடலாம். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. கிசான் விகாஸ் பத்ரா கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது ஒரு கூட்டுக் கணக்கில் ஏதேனும் ஒருவர் அல்லது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் முன்கூட்டியே மூட முடிவு செய்தால் கணக்கை முடிக்கலாம். இதற்கு ஒரு கெஜட் அதிகாரி உறுதிமொழி அளிக்க வேண்டும். அல்லது நீதிமன்றம் ஏதேனும் உத்தரவை பிறப்பித்திருந்தால் கணக்கை முடிக்கலாம்.

முதலீட்டு வைப்புத் தேதியிலிருந்து 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்குப் பிறகு கிசான் விகாஸ் பத்ரா கணக்கை ஒருவர் மூடலாம்.

உங்கள் கிசான் விகாஸ் பத்ராவை ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றலாம். இருப்பினும், அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

கிசான் விகாஸ் பத்ரா கணக்கை கணக்கு வைத்திருப்பவரின் மரணமடைந்தால் அவரது பரிந்துரையாளருக்கு, அல்லது கூட்டு கணக்கில் ஒருவர் மரணம் அடைந்தால் மற்ற கூட்டு உரிமையாளருக்களுக்கு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குறிப்பிட்ட அதிகாரத்திற்கு கணக்கு மாற்றப்படலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme Kisan Vikas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment