/tamil-ie/media/media_files/uploads/2021/04/post-pass-book.jpg)
Post Office Scheme : நம்முடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதில் மிகவும் பாதுகாப்பான ஒரு ரிட்டர்ன்ஸ் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சிட் ஃபண்ட், நகை, ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் என்று எதைப் பற்றி யோசித்தாலும் அதில் சட்ட சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. கையில் இருக்கும் பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து அதில் ஒரு கணிசமான லாபம் வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் உங்களுக்காக இருக்கவே இருக்கிறது தபால் நிலையங்களில் மாதாந்திர வருவாய் திட்டம்.
கணவன் மனைவி என இணையராக நீங்கள் இந்த மாதாந்திர வருவாய் திட்டத்தை துவங்கி அதில் ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு மாத வருவாயாக ரூ. 4950 கிடைக்கும். அதாவது வருடத்திற்கு ரூ. 59, 400 பணம் முதலீட்டாளர்களுக்கு, (6.6% வட்டி) கிடைக்கும். இந்த முதலீட்டின் மெச்சூரிட்டி முடியும் போது உங்களின் முதலீடு அப்படியே உங்களின் கைகளில் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் மாதத்திற்கு ரூ. 4,950 பணம் எந்த வித முதலீட்டு பாதிப்புகளும் இன்றி உங்களுக்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும். தனிநபர் கணக்காக இதனை நீங்கள் துவங்கினால் ரூ. 4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யமுடியும். கணவன் மனைவியாக நீங்கள் இந்த முதலீட்டு திட்டத்தை துவங்கினால் ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.