தபால் அலுவலகங்களில் மாத சேமிப்பு கணக்கிற்கு வரும் வட்டியை ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையாக சேமித்து வந்தால் இரட்டை வட்டி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தபால் அலுவலகங்களில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் கால அளவிற்கு ரூ.4.5 லட்சத்தை டிபாசிட் செய்தால், 7.6 சதவீத வட்டி அளித்து வருகிறார்கள். மொத்த வட்டித்தொகை ரூ.1,71,000. இதனை 60 பங்குகளாக பிரித்து மாதந்தோறும் ரூ.2,850 வட்டியாக வழங்கி வருகிறார்கள்.
டிபாசிட்டிற்கான வட்டித்தொகை நமது அக்கவுண்டிற்கு வந்தவுடன், பின் குந்த வட்டிப்பணத்தை, வைப்புத்தொகையில் டிபாசிட் செய்துவந்தால், அதற்கு 7.2 சதவீதம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், நாம் செலுத்தும் ரூ.4.5 லட்சம், ரூ.6.5 லட்சமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள், இத்திட்டத்தில் இணைந்து அதிக பயன் பெறுமாறு அஞ்சலக சேமிப்புத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.