Advertisment

ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 15 லட்சம் ரிட்டன்: போஸ்ட் ஆபீசில் செம்ம ஸ்கீம்

நீங்கள் கணிசமான தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை தபால் அலுவலகத்தில் முதலீடு செய்யலாம். இங்கே நீங்கள் முதலீடு செய்த தொகையை மூன்று மடங்காக கூட அதிகரிக்கலாம். ரூ. 5,00,000-ஐ, ரூ. 15,00,000க்கு மேல் எப்படி அதிகமாக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Investment

வீட்டில் குழந்தை பிறந்தால், ஒவ்வொரு பெற்றோரும் அக்குழந்தைக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தை பிறந்த உடனேயே பெற்றோர்கள் அனைத்து வகையான நிதித் திட்டமிடலையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தைகளின் பெயரில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மொத்த தொகையை முதலீடு செய்கிறார்கள்.

Advertisment

நீங்களும் மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆஃபீஸ் டெர்ம் டெபாசிட் அதாவது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்யுங்கள். வங்கிகளை விட தபால் அலுவலகத்தில் 5 வருட FD சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம்,  உங்கள் தொகையை மூன்று மடங்குக்கு மேல் அதிகப்படுத்தலாம். அதாவது ரூ. 5,00,000 முதலீடு செய்தால், ரூ. 15,00,000-க்கு மேல் சம்பாதிக்கலாம். இது எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ரூ. 5 லட்சத்தை, ரூ. 15 லட்சமாக மாற்ற, நீங்கள் முதலில் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக FD இல் முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலகம் 5 வருட FDக்கு 7.5 சதவீத வட்டி அளிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தற்போதைய வட்டி விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். இந்தத் தொகையை நீங்கள் திரும்பப் பெற வேண்டியதில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதை மீண்டும் முதலீடு செய்யுங்கள். இந்த வழியில், 10 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூ. 5,51,175 பெறுவீர்கள். மேலும், உங்கள் தொகை ரூ.10,51,175 ஆக மாறும். 

இந்த தொகையை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 
இதன் மூலம் உங்கள் தொகை மொத்தம் 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும். 15 வது ஆண்டில், முதிர்வு நேரத்தில், நீங்கள் முதலீடு செய்த ரூ. 5 லட்சத்தில் வட்டியில் இருந்து மட்டும் 10,24,149 ரூபாய் பெறுவீர்கள். மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும். பொதுவாக, டீன் ஏஜ் பருவத்தில்தான் குழந்தைக்கு பணத்தேவை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த 15 லட்ச ரூபாயை நீங்கள் அவரது எதிர்காலத்திற்காக எளிதாக செலவிடலாம்.

Advertisment
Advertisement

தபால் அலுவலக வட்டி விகிதங்கள்

வங்கிகளைப் போலவே, அஞ்சலகங்களிலும்  ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி,

ஒரு வருட கணக்கு - 6.9% ஆண்டு வட்டி

இரண்டு ஆண்டு கணக்கு - 7.0% ஆண்டு வட்டி

மூன்று ஆண்டு கணக்கு - 7.1% ஆண்டு வட்டி

ஐந்தாண்டு கணக்கு - 7.5% ஆண்டு வட்டி

Fixed Deposits Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment