/tamil-ie/media/media_files/uploads/2023/01/money_Post-office.jpg)
தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசாங்க ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை விகிதங்கள் உயர்த்தப்பட்டதை படிப்படியாக வங்கிகள் கடந்து வந்தன. பணவீக்கத்தை எதிர்க்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ விகிதத்தை மொத்தம் 225 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25% ஆக திருத்தியது.
ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலாண்டிற்கான சில சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இந்த உயர்வு அஞ்சல் அலுவலக கால வைப்புத்தொகைகளையும் (POTD) உள்ளடக்கியது.
வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி
இதனால், பொது மற்றும் தனியார் வங்கிகள், அஞ்சல் அலுவலக கால வைப்பு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் நிலையான வைப்புத்தொகை (FD) மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
அதன்படி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி போன்ற பெரிய வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தி உள்ளன.
அந்த வகையில், அஞ்சலக கால வைப்புகளுக்கும் FD வட்டி விகிதங்களுக்கும் இடையிலான விரைவான ஒப்பீடு-ஐ பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் வட்டி
போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட்டுக்கு (POTD) தற்போது ஒரு வருடம், இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 6.6%, 6.8% மற்றும் 6.9% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த காலாண்டிற்கான அதிகரிப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் 5 வருட அஞ்சல் அலுவலக கால வைப்புகளுக்கு 7% வட்டியைப் பெறுவார்கள்
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி
HDFC வங்கியானது 6.50% முதல் 7% வரையிலான வட்டி விகிதத்துடன் ஒன்று முதல் ஐந்து வருட கால ஃபிக்ஸட் டெபாசிட்களை வழங்குகிறது.
எஸ்பிஐ டிசம்பர் 13, 2022 நிலவரப்படி 6.25% முதல் 6.75% சதவீதம் வரை வட்டி விகிதத்தை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை 6.60% முதல் 7% சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.