/tamil-ie/media/media_files/uploads/2019/03/a867.jpg)
இந்த சேமிப்பு திட்டத்தில் தற்போது 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு காலாண்டிலும் மாறும்.
post-office-savings-scheme | போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்பெஷல் திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 வரை சம்பாதிக்கலாம். இந்தத் திட்டம் குறித்து பார்ப்போம்.
போஸ்ட் ஆபிஸ் மூத்தக் குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டம்
மூத்தக் குடிமக்கள் வயதான காலத்தில் பணத்திற்காக வேறொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றால், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதற்கு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது முக்கியம். அந்த வகையில், அஞ்சல் துறையில் மிகப்பெரிய திட்டங்கள் உள்ளன. இதில், நீங்கள் முதலீடு செய்தால் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதில், முதலீட்டாளர்கள் பணத்தை ஒன்றாக டெபாசிட் செய்வதன் மூலம் மிகப்பெரிய வருமானத்தைப் பெறலாம்.
இது வங்கி FD ஐ விட அதிகம். இந்த சேமிப்பு திட்டத்தில் தற்போது 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு காலாண்டிலும் மாறும்.
ரூ.10,250 வருமானம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், தற்போது வட்டி 8.2 சதவீதம் கிடைக்கும். இதனால் முதிர்ச்சியின்போது, ரூ.7,05,000 கிடைக்கும். இதன்மூலம், மாதாந்திர வருமானம் ரூ.10,250 கிடைக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.