வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் கணக்கானது, வட்டி, சேமிப்பு மற்றும் முதலீட்டு கருவியாகும். இந்த திட்டமானது முற்றிலும் ஆபத்து இல்லாத, மத்திய அரசின் ஆதரவுடன் சிறிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது நீண்ட காலத்திற்கு அதிக வருமானம் தரும் திட்டமாகும். வரி மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போதைய பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது.
முதலீட்டு காலத்தில் பணவீக்கத்தின் உயர்வை வெல்ல போதுமானதாக உள்ளது. பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால், அதை 5 ஆண்டுகளின் தொகுதியில் எண்ணற்ற முறை நீட்டிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்க விரும்புவோருக்கு, பிபிஎஃப் கணக்கை நீண்ட கால ஆபத்து இல்லாத முதலீடாக பயன்படுத்தலாம். ஒரு நபர் நீண்ட காலத்திற்கு பிபிஎப்பில் முதலீடு செய்தால், முதலீட்டின் காலப்பகுதியில் வட்டி கூட்டுவதன் மூலம் அவர் நன்மை பெறுவார்கள்.
பிபிஎஃப் கணக்கு அம்சங்களைப் பற்றி பேசிய செபி, பதிவு செய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, பிபிஎஃப் கணக்கை ஓய்வூதிய நிதி திரட்டலுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் நீட்டிக்க விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் கணக்கு திறக்கப்பட்ட 15 வது ஆண்டில் கொடுக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவர் அதை ஐந்தாண்டு காலகட்டத்தில் எண்ணற்ற முறை நீட்டிக்க முடியும். எனவே, ஒரு நபர் 30 வயதிற்குள் பிபிஎஃப் கணக்கைத் திறந்தால், பிபிஎஃப் கணக்கின் 5 ஆண்டு நீட்டிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி 30 ஆண்டுகளாக எளிதாக முதலீடு செய்யலாம்.
ஒரு நபர் குறைந்த அளவிலான அபாயங்களை கொண்டிருந்தால் மற்றும் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருந்தால், அவர்கள் சீக்கிரம் சேமிக்கத் தொடங்க வேண்டும். வாடிக்கையாளர் தனது பிபிஎஃப் கணக்கைத் தேர்ந்தெடுத்து, மாதத்திற்கு 9,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, பிபிஎஃப் இருப்பு, 29 லட்சத்து 29 ஆயிரத்தி 111 ஆக இருக்கும்.
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் நீட்டிப்பு நன்மைகளைப் பயன்படுத்தினால் மற்றும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு கூட்டு நன்மைகளைப் பெற்றால், அவர்கள் 1.11 கோடியை முதிர்வில் பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”