/tamil-ie/media/media_files/uploads/2017/08/money7.jpg)
நீங்கள் பணிப்புரியும் வங்கியில் மாதந்தோறும் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?
பிஎஃப் திட்டம்:
அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் பிஎஃப் பிடிக்கப்படும்.பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பி.பி.எப், ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்.
அரசு ஊழியர்களின் புராவிடண்ட் பண்டுக்கு இணையாக தற்போது பிஎஃப் திட்டத்திலும் 8% வட்டி வழங்கப்படுகிறது.ஒரே தவணையில் முழு தொகையையோ அல்லது அதிகபட்சம் 12 தவனைகளாகவோ பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும் தற்போது பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ஆண்டுக்கு 8 சதவிகிதமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள், ஐந்து ஆண்டுகள் முடிவில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறையாவது முதலீடு செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், எட்டாவது ஆண்டில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டியையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பிபிஎஃப் கணக்கிலேயே தங்கி இருக்கிறது என்றால், 24-வது ஆண்டில் இருந்து மாதம் 50,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.