நாட்டில் மூத்த குடிமக்களின் சேமிப்புத் திட்டங்கள், பிபிஎஃப் (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள், வங்கி நிலையான வைப்புத்தொகைகள் முக்கிய முதலீட்டு கருவிகளாக உள்ளன.
இந்த வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2 சதவிகிதம் வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி எஃப்.டி.கள் 7.75 சதவிகிதம் வரை வழங்குகின்றன. தபால் அலுவலக நேர வைப்புகளுக்கு 7.5 சதவிகிதம் வரை வருடாந்திர வட்டி விகிதம் கிடைக்கிறது. தொடர்ந்து, பிபிஎஃப் (PPF) 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி டெபாசிட்டரின் வயது மற்றும் டெபாசிட்டின் காலத்தை பொறுத்து 7.75 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
எஸ்.பி.ஐ-யை பொறுத்தவரை 4 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது.
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்
முதலீட்டாளர்கள் சேமிப்பு வைப்புகளில் 4 சதவீத வட்டி விகிதத்தை எளிதாகப் பெறலாம். 1 வருட போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்களில் முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
2 மற்றும் 3 ஆண்டுகளில் 7 சதவிகிதமும், 5 ஆண்டுகளில் 7.5 சதவிகிதமும் கிடைக்கும். அதேநேரம் 5 வருட தொடர் வைப்புத்தொகையில் (ஆர்.டி) முதலீடு செய்தால் 6.5 சதவீதம் சம்பாதிக்கலாம்.
கிசான் விகாஷ் பத்ரா
தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் (NSC) முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் பெறக்கூடிய வட்டி விகிதம் 7.7 சதவீதம் ஆகும். கிசான் விகாஸ் பத்ராவின் முதலீட்டாளர்கள் 7.5 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் 7.1 சதவீத விகிதத்தைப் பெறலாம்.
மேலும், சுகன்யா சம்ரித்தி கணக்கில் முதலீடு செய்தால், உங்களுக்கு 8 சதவீதம் வருமானம் கிடைக்கும். மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்) அதன் முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“