புதுவையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை பாராமரிப்பு பணிகளுக்குப் பின் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரியிலிருந்து பெங்களுரூவிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படுகிறது. 80 பயணிகள் பயணிக் கூடிய விமானம் இயக்கப்படுகிறது. 2 விமான சேவைகளாக இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமானம், அங்கிருந்து பெங்களூரு செல்லும். பின்னர் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும்.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, கடந்த 10 நாட்களாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும்
விமான சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சேவை இன்று (பிப்.18) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி, புதுவை விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு விமானம் புறப்பட்டு, 2.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்,
செய்தி: பாபு ராஜேந்திரன்