Advertisment

5ஆவது முறையாக ரெப்போ வட்டி உயர்வு.. இ.எம்.ஐ. அதிகரிக்குமா?

கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ், “பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேல் நீடிக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

author-image
WebDesk
New Update
RBI Monetary Policy Committee has raised repo rate by 35 basis

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

உயர்ந்த பணவீக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய மந்தநிலை பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

Advertisment

இந்திய ரிசர்வ் வங்கி, ஐந்தாவது தொடர் வட்டி விகித உயர்வை அறிவித்துள்ளதால், கடன் விகிதங்கள் மேலும் அதிகரிக்கும். வட்டி விகிதங்களின் படிப்படியான இறுக்கம் முடிவடைவதால், மூலதன வரவு மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய்க்கான சீன தேவை குறித்த கவலைகள் காரணமாக, பெட்ரோலியத்தின் விலை அதன் உயரத்தில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

முக்கிய பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரூபாயின் வலுவூட்டல் மற்றும் சீன தேவை குறைவதால் கச்சா விலை கட்டுக்குள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், “இந்தக் கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ், பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேல் நீடிக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பணவீக்கத்தின் மேல் அர்ஜுனர் பா்ரவையை செலுத்தி கவனித்தவருகிறோம்” என்றார்.

இதற்கிடையில் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான அந்நிய முதலீடு 22.7 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் இஎம்ஐ உள்ளிட்ட கடன்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை மாற்றியமைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment