ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, ஒரு பரிவர்த்தனை தொழில்நுட்பம் போன்ற எந்த காரணங்களினாலோ பூர்த்தி செய்யப்படாமல் போனால் என்றால் ஐந்து நாட்களுக்குள் அது சரி செய்யப்பட வேண்டும் என்று ஆர்பிஐ இந்தியாவின் மற்ற வங்கிகளுக்கு அறிவுருத்தியுள்ளது. மேலும், வங்கி தரப்பில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக ஸ்வைப்பிங் மெஷின், ஆதார் பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்தாலும், சமந்தப்பட்ட வங்கிகள் ஐந்து நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் குறைகளை சரி செய்திருக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்குள் சரி செய்யப் படாமல் இருந்தால், பின் வரும் ஒவ்வொரு நாட்களுக்கும் வாடிகையாளர்களுக்கு ரூ.100 அபராதமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது.
IMPS பரிவர்த்தனைகளில் ஏற்படும் கோளாறுகளை ஒரே நாட்களுக்குள் சமந்தப்பட்ட வங்கி சரி செய்திருக்க வேண்டும். இல்லையேல், சரி செய்யும் வரை பின் வரும் நாட்களில் தினமும் ரூ.100 அபாராதமாக வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும். வங்கி தரப்பில் ஏற்பட்ட தவறுகளுக்குத் தான் இந்த ஆர்பிஐ அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு ஒவ்வொரு வங்கியும் பணப்பரிவர்தனை கோளாறை எத்தனை நாட்களுக்குள் சரி செய்யா வேண்டும் , அபராதம் வைக்க வேண்டுமா? வேணாமா? என்பதை தனிப்பட்ட முறையில் கவனித்து வந்தனர். ஆனால், தற்போது ஆர்பிஐ எல்லா வங்கிக்கும் பரிவர்த்தனை தொடர்பான நடைமுறையை சீராக்கியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Rbi new guidelines atm failed transaction complaints 5 days penalty 100 per day
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?