RBI LATEST NEWS: இன்று இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பாலிசி ரெப்போ விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் இன்று குறைத்ததின் மூலம் ரெப்போ விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய மூன்று கொள்கை அறிவிப்புகளிலும், ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ரிசர்வ் வங்கி தனது மூன்றாவது இருமாததிற்க்கான மானிடரி பாலிசியை அறிக்கையை வெளியிட்டது. இதில் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 5.15 சதவீதமாக திருத்தியுள்ளது . மேலும்,நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 7 சதவீதத்திலிருந்து 6.9 ஆக குறைத்துள்ளது.
பணவீக்கம் தொடர்பான தகவல்கள்:
பணவீக்கக் கட்டுப்பாடு, ரிசர்வ் வங்கி தனது இலக்குக்குள் இருப்பதாகக் கூறியது . மேலும், சிபிஐ சில்லறை பணவீக்கம் FY2019-20 முதல் பாதியில் 3.1 சதவீதமாகவும், FY2019-20 இரண்டாம் பாதியில் 3.5-3.7 சதவீதமாகவும் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
முன்னணி பொருளாதாரங்கள் இடையே வர்த்தக பதட்டங்கள் அதிகமாமானதால் கடந்த, ஜூன் மனிடரி பாலிசி நடைமுறையானதிலிருந்து உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.
முக்கிய வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்துள்ளன என்றும், சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சிகள் சொல்லும்படி இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு என்ன லாபம் :
ரெப்போ விகிதம் குறைவானால் நாம் வங்கியிலிருந்து இனி கடன் வாங்கும்போது அத்ரக்கான வட்டி விகிதம் குறையும்.இருந்தாலும், இதை வங்கிகள் தான் மனசு வைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ரெப்போ வை குறைக்கும் போதெல்லாம் உங்களது வங்கி லெண்டிங் விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் , நமது வங்கிகள் அவ்வாறு செய்வதில்லை என்பதே இயல்பான உண்மை. மேலும், fixed deposit-லிருந்து வருமானம் பெரும் மக்களுக்கு இந்த ரெப்போ குறைப்பு ஒரு பலத்த அடியாய் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.