/tamil-ie/media/media_files/uploads/2022/07/RICE.jpg)
புதிய விலை அறிவிப்பு இன்று (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், கோதுமை, பருப்பு, தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளன.
அரிசி மற்றும் தானியப் பொருள்களுக்கு 5 சதவீதம் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை18) முதல் அரிசி மற்றும் தானியப் பொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே உள்ள சில பொருள்களுக்கு ஜிஎஸ்டியை கூட்டவும், சில பொருள்களுக்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய விலை அறிவிப்பு இன்று (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், கோதுமை, பருப்பு, தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளன.
இதேபோல் செபி, ரிசர்வ் வங்கி மற்றும் ஐஆர்டிஏ உள்ளிட்ட அமைப்புகளின் சேவை கட்டணமும் உயரும். இந்த அமைப்புகளுக்கு சேவை கட்டணமாக 18 சதவீதம் வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு:-
ரூ.1000 வாடகை கொண்ட ஒருநாள் ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் வரி விதிப்பு.
சோலார் வாட்டர் ஹ_ட்டர்களுக்கு 12 சதவீதம் வரி விதிப்பு. முன்னர் இது 5 சதவீதம் ஆக இருந்தது.
உயிரி கழிவு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு 12 சதவீதம் வரி விதிப்பு.
அட்லஸ் மற்றும் மேப் உள்ளிட்ட பொருள்களுக்கு 12 சதவீதம் வரி விதிப்பு. அதேபோல் அச்சு பிரதி, மை, பென்சில், ஷார்ப்பனர் (கட்டுரை) உள்ளிட்ட உபகரணங்கள் மீதான வரி 18 சதவீதமாக உயர்வு.
வரி குறைப்பு:-
வடகிழக்கு மாநிலங்களுக்கு எகானமி வகுப்பு பயணத்துக்கு வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்சார வாகனங்களுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.