ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1 கோடி? இந்தியாவில் பெற்றோராக இருப்பதற்கான அதிர்ச்சியூட்டும் செலவு நிலவரம்

சமீபத்திய கணக்கீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் நகர்ப்புற இந்தியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான மொத்தச் செலவு (பிறப்பு முதல் கல்லூரி வரை) ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூடச் செல்லலாம் எனத் தெரியவந்துள்ளது.

சமீபத்திய கணக்கீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் நகர்ப்புற இந்தியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான மொத்தச் செலவு (பிறப்பு முதல் கல்லூரி வரை) ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூடச் செல்லலாம் எனத் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
cost of parenthood in India

ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1 கோடி? இந்தியாவில் பெற்றோராக இருப்பதற்கான அதிர்ச்சியூட்டும் செலவு நிலவரம்

நான் சமீபத்தில் என்ஜினீயரிங் வகுப்பில் முதலிடம் பிடித்த நெருங்கிய தோழி அனுவுக்கு, குழந்தை பிறந்ததற்காக வாழ்த்து சொல்ல அழைத்தேன். 105 நிமிடங்கள் நீடித்த அந்த அழைப்பில், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எங்கள் கல்லூரி கதை இருந்தது. மற்ற அனைத்தும், அனுவின் ஆதங்கங்கள். "தூக்கம் இப்போது ஆடம்பரம், என்னால் அதை வாங்க முடியாது" என்று அனு சொன்னார். இது எனக்கு ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியது.

Advertisment

2 குழந்தைகளுக்குத் தந்தையாகிய நான், "இந்தியா போன்ற நாட்டில், பெற்றோராக இருப்பதுதான் மிகப் பெரிய ஆடம்பரம். இப்போது போய் நீங்க சலித்துக் கொள்ளாதீர்கள்" என்று அணுவிடம் சொன்னேன். இந்த வார்த்தை அனுவை கோபப்படுத்தியது. அந்த விவாதம்தான் 100 நிமிடங்களுக்கு நீடித்தது. அனு வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, குழந்தையுடன் இருக்க முடிவு செய்திருந்தார். அதை நான் மதிக்கிறேன். ஆனால், அதன் காரணமாக அவர்களின் வீட்டிற்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.12 லட்சம் வருமானம் குறைந்துவிட்டது.

அனு தன்னுடைய செலவுகளைப் பட்டியலிட்டார். டயப்பர்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு மாதம் ரூ.5,000, ஆர்கானிக் ஃபார்முலா பால் ஆகியவற்றிற்கு மாதம் மேலும் ரூ.5,000, எதிர்பாராத குழந்தை மருத்துவர் வருகை ரூ.2,500 செலவாகும். இப்போது புரிகிறதா? எங்களுக்கு மாதத்திற்கு ரூ.50,000 எப்படி குறைகிறது என்று? என அனு கேட்டார்.

அனுவின் கதை தனித்துவமானது அல்ல. இந்தியாவில் உள்ள பல பெற்றோர்களின் நிலை இதுதான். ஒரு குழந்தை பிறந்த பிறகு, குடும்பத்தின் நிதித் திட்டமிடல் பெரும்பாலும் தலைகீழாக மாறிவிடுகிறது. காதல் மற்றும் நிதிப் பொறுப்புகளுக்கு இடையேயான போராட்டத்தில் எண்ணற்ற இந்தியப் பெற்றோர்கள் சிக்கியுள்ளனர்.

Advertisment
Advertisements

ஆடம்பரமான பெற்றோர்: ரூ.1 கோடி செலவு

2025-ம் ஆண்டில் நகர்ப்புற இந்தியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது வெறும் "வளர்ச்சிப் பயணம்" மட்டுமல்ல; அது இரு பெற்றோர்களும் கட்டாயம் சமாளிக்க வேண்டிய ஒரு நிதி நெருக்கடியாகும். பிறப்பு முதல் கல்லூரி வரை, ஒரு குழந்தைக்கு ஆகும் செலவு, மிதமான அளவில், ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூடச் செல்லலாம். பள்ளிக் கட்டணங்கள் பணச் செடியை விட வேகமாக வளர்கின்றன. வெளிப்பாட நடவடிக்கை (Extracurriculars) கிராண்ட் கேன்யன் அளவுக்கான பணப்பைகளைக் கோருகின்றன. டயப்பரை விட்டு வெளியேறிய குழந்தைகள் கூட, இப்போது பிராண்டுகளைத் தேடுகிறார்கள். நடுத்தரக் குடும்பங்களுக்கு, குழந்தைப் பேற்றின் மகிழ்ச்சி பெரும்பாலும் நிதி உறுதியற்ற தன்மையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

பள்ளிக் கட்டண அதிர்ச்சி

சில ஆண்டுகளுக்கு முன் சென்றால், 90-களில் நான் பள்ளியில் படித்தபோது, 5-ஆம் வகுப்புக்கான மாதாந்திர கட்டணம் ரூ.5, 6-ஆம் வகுப்புக்கு ரூ.6 என்று இருந்தது. ஆனால், 2012-ஆம் ஆண்டு என் முதல் குழந்தையை ப்ரீ-ஸ்கூலில் சேர்க்கத் தயாரானபோது அதிர்ச்சி காத்திருந்தது. தென் மும்பையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு "பிரம்மாண்டமான" பள்ளியில், ப்ளே ஸ்கூலுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.1.5 லட்சம். மிக அருகில் இருந்த சர்வதேசப் பள்ளி ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வசூலித்தது. நானும் என் மனைவியும் எஞ்சினீயர்கள். நாங்கள் எங்கள் எஞ்சினீயரிங் படிப்புக்குச் செலவழித்த மொத்தத் தொகையை விட, அந்த சர்வதேசப் பள்ளியின் ஓராண்டு கட்டணம் குறைவாக இருந்தது என்பதே எங்களை அதிர்ச்சியடையச் செய்தது.

நகர்ப்புறம் vs கிராமப்புறக் கல்வி 

NSS (தேசிய மாதிரி ஆய்வு) இன் தரவுகளின்படி, நகர்ப்புற இந்தியாவில் பெற்றோரின் தேர்வு தலைகீழாக உள்ளது. கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளை நாடினாலும், நகர்ப்புறங்களில் 51% க்கும் அதிகமான மாணவர்கள் தனியார் உதவி பெறாத பள்ளிகளில் (Private Unaided Schools) சேர்க்கப்படுகின்றனர். இது, தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது.

பள்ளிக் கட்டணங்களுடன் இது முடிந்துவிடுவது இல்லை என்று நினைத்தால் அது தவறு. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வேடிக்கையாக இருந்த வெளிப்பாட நடவடிக்கைகள், இப்போது "எதிர்காலத்திற்குத் தயாரான" குழந்தைகளை உருவாக்கும் பந்தயங்களாக மாறி உள்ளன. இதை "உலகளாவிய குடிமக்கள்" என்றும் அழைக்கிறார்கள். அபாகஸ், மனக் கணக்கு, சமகால நடனம், பார்க்கூர், நாடகக் கலை... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவை 1 குழந்தைக்கு ஆண்டுக்கு மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவை அதிகரிக்கின்றன. இது விளையாட்டை அழுத்தமாக மாற்றியுள்ளது.

"இந்த கோச்சிங்க்கள் எல்லாம் கல்லூரி விண்ணப்பங்களுக்கு அவசியம் என்று பயிற்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், ரூ.2 லட்சம் பள்ளிக் கட்டணத்துடன், நாங்கள் சேமிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்று பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா குப்தா ஆன்லைன் தளத்தில் (Reddit’s FIREIndia) பகிர்ந்தபோது, பல பெற்றோர்கள் இதை ஆமோதித்தனர்.

தனியார் பள்ளிகள் இந்தக் கட்டண நெருக்கடிக்கு மேலும் தீ மூட்டுகின்றன. பள்ளியின் உள்ளேயே நடக்கும் செயல்பாடுகளுக்கான கட்டணம் ஒரு பருவத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை செல்கிறது. வெளியிலுள்ள அகாடமிகள் 'சான்றளிக்கப்பட்ட' திறமைகளுக்காக அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தாய்: "என் 12 வயது மகள் டென்னிஸ் பாடங்களுக்கு கெஞ்சுகிறாள். ஆண்டுக்கு ரூ.60,000. எங்களுடைய திருமண நாள் விடுமுறையைத் தியாகம் செய்தோம். இது குழந்தைக்குச் செய்யும் அன்பா, அல்லது ஒரு பந்தயமா?" என்று கேட்டிருந்தார்.

இன்றைய குழந்தையை வளர்ப்பது என்பது ஆடைக் குறைப்பில் புதிய உச்சத்தைத் தொடுகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் விளையாட்டு மைதானத்தின் பிராண்ட் மோகம் காரணமாக, டீன் ஏஜ் குழந்தைகளின் ஆடைச் செலவு 2 மடங்காகிறது. உலகமயமாக்கல் இதற்கு வழிவகுத்து உள்ளது. மால்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்கள் ஆடம்பரத்தைக் குழந்தைகளின் அலமாரிகளுக்குக் கொண்டு வந்தன. ஒரு நாள் மால் விசிட் குறைந்தபட்சம் ரூ.10,000 செலவை ஏற்படுத்துகிறது. உணவு, பிராண்டட் ஆடைகள், காலணிகள், புதிய மொபைல், அனிமே பொம்மைகள் எனப் பட்டியல் நீள்கிறது.

இது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல, ஒரு குழுவில் "பொருந்திப் போவதற்கான" அழுத்தம். தனியார் பள்ளி வளாகங்களில் குழந்தைகள் தங்கள் புதிய ஏர்பாட்ஸைக் (ரூ.18,000) காட்டும்போது, தங்கள் குழுவில் இருக்க வேண்டுமென்றால் வாங்கியே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்தச் "சிறு" செலவுகள் பல ஆண்டுகளாகச் சேர்ந்து, பட்ஜெட்டில் பல லட்சங்களைத் திருடி விடுகின்றன.

இந்த நிதிச் சுமையைத் தாங்க முடியாது என்று சில இளம் தம்பதிகள் சேர்ந்து முடிவெடுக்கின்றனர். இதற்காக ஒரு சுருக்கப்பெயர் கூட உள்ளது: DINKs (Dual Income, No Kids) - இரட்டை வருமானம், குழந்தை இல்லை. இந்திய நகரங்களில் இந்த 'DINK' குழுவினர் அதிகரித்து வருகின்றனர். குழந்தைகளுக்கான கட்டணம் இல்லை, கோச்சிங் குழப்பம் இல்லை. அவர்கள் பயணிக்கிறார்கள், ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சேமிக்கிறார்கள். குழந்தை? ஒருவேளை ஒருபோதும் வேண்டாம்..." இதுதான் DINKகளின் சித்தாந்தம். குழந்தையின் செலவுகள் வருமானத்தில் 50% வரை சாப்பிடுவதால், குழந்தை இல்லாத DINKகளின் உயர் வளர்ச்சி முதலீடுகளை நிதி வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

2025 இந்தியாவில் குழந்தையை வளர்ப்பது என்பது இதயம் மற்றும் பணப்பைக்கு இடையேயான யுத்தம். பள்ளி நாட்களிலிருந்து கட்டணங்கள் 4 மடங்காகப் பெருகிவிட்டன. தனியார் கல்விச் செலவுகள் விண்ணைத் தொடுகின்றன. குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்காக ஒரு திடமான திட்டம் இல்லாமல் ஒரு குழந்தை வருவதுதான் பிரச்னைக்கு ஆரம்பம்.

நிதி நிபுணர்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள்:

கல்வி பணவீக்கம் (Education Inflation) 10% ஆக இருக்கும்போது, அதை விஞ்சும் வகையில் 12% வருமானம் ஈட்டக்கூடிய குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்டுகளில் முன்கூட்டியே எஸ்.ஐ.பி-களை தொடங்கவும்.

அவசர காலத் திட்டம்: நல்ல குழந்தை கல்வி காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுங்கள். இது ஒரு பாதுகாப்பான, வரிச் சலுகை கொண்ட நிதித் திட்டமாகும். உங்கள் இல்லாதபோதும் குழந்தையின் உயர்கல்விச் செலவுகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

பெண் குழந்தைக்கான திட்டம்: பெண் குழந்தைகளுக்காக, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற அரசாங்கத்தின் திட்டங்களைத் தொடங்குங்கள். இது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை பங்களிக்க அனுமதிக்கும், வரி விலக்கு அளிக்கும் திட்டமாகும் (2025 நிலவரப்படி 8.2% வட்டி).

சேமிப்பில் கவனம்: பொதுப் பயன்பாட்டிற்காக, பொது வருங்கால வைப்பு நிதியை (PPF) தேர்வு செய்யலாம் (7.1% வட்டி, 15 வருட லாக்-இன்). செலவு குறைந்த கல்விக்காக உங்கள் குழந்தைகளுக்குத் திறமைகளை வளர்க்கவும், கல்வி உதவித்தொகைகளை (Scholarships) ஆராயவும்.

பாதுகாப்பு வலை: தேவைப்படும்போது கடன் வலையில் சிக்காமல் இருக்க, பல்வகைப்படுத்தப்பட்ட அவசரகால நிதியை (Emergency Fund) உருவாக்கவும். குழந்தைகளுக்குப் பணத்தைச் சேமிப்பது, முதலீடு செய்வது, மோசடிகளிலிருந்து விலகி இருப்பது போன்ற நிதி கல்வியறிவை இளம் வயதிலேயே கற்பிக்கவும்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற பள்ளி: உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற சரியான பள்ளிகளைத் தேர்வு செய்யவும். இன்று உங்களால் சமாளிக்க முடிந்த ஒன்று, ஒவ்வொரு முறையும் சாத்தியமாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமான பந்தயம் இது மிக எளிய விஷயம் போல் தோன்றலாம், ஆனால் தேவை (Need), ஆசை (Want) ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை இளம் வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்பிப்பது நீண்ட காலத்திற்கு உதவும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: