/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-2000-money-8.jpg)
இதில், ஒற்றை மற்றும் வழக்கமான பிரீமியம் செலுத்தும் விருப்பம் உள்ளது. 5 வருட முதலீட்டிற்கான பாலிசியில் உத்திரவாதக் கூடுதலாக கிடைக்கும்.
ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கைமுறையில் பணப் பற்றாக்குறை பிரச்னைக்குரியதாக உள்ளது. ஆகவே ஒருவர் முன்கூட்டியே தயார்படுத்துவது முக்கியம்.
இதற்கு ஓய்வூதியத் திட்டங்கள் இதற்கு உதவுகின்றன. எல்ஐசி மூத்த குடிமக்களை சுயசார்புடையவர்களாக மாற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்று ஜீவன் நிதி திட்டம் (எல்ஐசி ஜீவன் நிதி திட்டம்). இது ஒரு பாரம்பரிய ஓய்வூதியத் திட்டமாகும். மேலும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது.
எல்ஐசி ஜீவன் நிதி திட்டம்
இந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 58 வயது வரை உள்ள ஒருவர் முதலீடு செய்யலாம். முதிர்வு வயது 55 முதல் 65 ஆண்டுகள் வரை ஆகும்.
இதில், ஒற்றை மற்றும் வழக்கமான பிரீமியம் செலுத்தும் விருப்பம் உள்ளது. 5 வருட முதலீட்டிற்கான பாலிசியில் உத்திரவாதக் கூடுதலாக கிடைக்கும்.
போனஸ் 6 ஆம் ஆண்டு முதல் பொருந்தும். விபத்து மரணம் மற்றும் ஊனமுற்ற ரைடர் வசதியும் இதில் உள்ளது. ஓய்வூதியத் தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் செலுத்தப்பட்ட பிரீமியம் மற்றும் 1/3 முதிர்வுத் தொகையும் வருமான வரிச் சட்டப் பிரிவுகள் 80C மற்றும் 10 (10A) கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.28 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஆண்டு, மாதாந்திர, அரையாண்டு மற்றும் காலாண்டு முறைகளில் பிரீமியம் செலுத்தலாம்.
ஆண்டு பிரீமியம் ரூ.26,503, அரையாண்டு பிரீமியம் ரூ.13,393, காலாண்டு பிரீமியம் ரூ.6,766 மற்றும் மாதாந்திர பிரீமியம் ரூ.2,255 ஆகும்.
இதன்படி, பாலிசிதாரர் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.72 சேமிக்க வேண்டும். முதிர்ச்சியடைந்த பிறகு, உங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.