Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

உங்க பாரத்தை இறக்கி வையுங்கள்... வெறும் ரூ. 1000 செலுத்தி 7.6 % வட்டி பெறலாம்!

நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.

Written by WebDesk

நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.

author-image
WebDesk
07 Dec 2020 12:44 IST

Follow Us

New Update
post office savings post office account

post office savings post office account

savings scheme money savings scheme : இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

Advertisment

ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம்.

ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.

Advertisment
Advertisements

குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கை தொடங்கலாம் .

குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம் .

சுகன்யா சமிர்தி கணக்கை எவ்வாறு திறப்பது?

ஒரு கணக்கைத் திறக்க, நீங்கள் சுகன்யா சமிர்தி கணக்குத் திறக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளை அல்லது தபால் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.நீங்கள் மகளின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாவலர் அல்லது மகளின் பெற்றோர் முகவரி ஆதாரத்துடன் பாதுகாவலர் அல்லது மகளின் பெற்றோரின் முகவரி ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

சுகன்யா நினைவு கணக்கைத் திறக்க, நீங்கள் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!