மாதம் 10 ஆயிரம் வரை சம்பாதிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் சூப்பர் ப்ளான்

SBI annuity scheme: முதலீட்டாளர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அவர் ரூ.5,07,964 டெபாசிட் செய்ய வேண்டும்.

SBI annuity scheme: முதலீட்டாளர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அவர் ரூ.5,07,964 டெபாசிட் செய்ய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI annuity scheme, investment scheme

உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, நீண்ட கால மற்றும் நிலையான வருவாயைக் கொடுக்கும் விஷயங்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். பெரும்பாலும், மக்கள் தவறான இடங்களில் முதலீடு செய்கிறார்கள், பின்னர் வருத்தப்படுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முதலீடு செய்ய சரியான இடத்தை அறிந்துகொள்வதும் புரிந்து கொள்வதும் முக்கியம். எஸ்பிஐயின் எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டம் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீங்கள் மாத வருமானத்தைப் பெற ஆரம்பிக்கலாம்.

Advertisment

எஸ்பிஐயின் சிறந்த முதலீட்டு திட்டம்

எஸ்பிஐயின் இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தின் டெபாசிட் காலத்திற்கு சமமாக இருக்கும். நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு டெபாசிட் செய்தால், பத்து வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தும் விகிதத்திற்கு ஏற்ப வட்டி கிடைக்கும்.

மாதம் ரூ.10,000 வருமானம் பெற என்ன செய்யலாம்

Advertisment
Advertisements

முதலீட்டாளர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அவர் ரூ.5,07,964 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில், அவர் 7 சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் பெறுவார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 கிடைக்கும். எதிர்காலத்திற்காக வருமானத்தை அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

முதலீடு செய்வதற்கான விதிமுறைகள்

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.1000 இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. வருடாந்திர கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகையில் வட்டி தொடங்குகிறது. இந்த திட்டங்கள் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்தவை.

தொடர்ச்சியான வைப்பு (ஆர்.டி) திட்டங்கள்

ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் சேர்ந்து இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது. பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் ஆர்.டி.க்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை சிறிய சேமிப்பு மூலம் ஆர்.டி.யில் டெபாசிட் செய்யப்படுகிறது.. மேலும் முதிர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியுடன் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் ஆர்.டி திட்டம் மக்களால் அதிகம் விரும்பப்படும் திட்டமாக கருதப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Investment Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: