/tamil-ie/media/media_files/uploads/2018/11/it-girl-lavanaya-6.jpg)
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த சில மாதங்களாக புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி அறிவிப்பாக, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, தற்போது, பிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் உயர்த்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதே எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வை எழுப்பியுள்ளது.
எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ள வட்டி விகிதம் முழு விபரம்
1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு கடந்த 30.7.18 தேதி மாற்றப்பட்ட வட்டி விகிதம் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது அட்டவணையில் இன்று(28.11.18) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதம் இடம்பெற்றுள்ளது .
இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும். எஸ்பிஐ- யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளுக்கு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.