/tamil-ie/media/media_files/uploads/2022/07/savings-4-unsplash.jpg)
புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ-SBI) உத்ஸவ் டெபாசிட் (Utsav Fixed Deposit Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு திட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் கிடைக்கும்.
இந்த உத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில், எஸ்பிஐ 1000 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் வழக்கமான விகிதத்தை விட 0.50% கூடுதல் வட்டி விகிதத்தைப் பெற தகுதியுடையவர்கள். இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 15, 2022 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் இந்தத் திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும், எஸ்பிஐயில் ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டன. SBI புதிய வட்டி விகிதங்களை ஆகஸ்ட் 13, 2022 அன்று அறிவித்தது. அதன்படி, பல்வேறு தவணைக்காலங்களுக்கான வட்டி விகிதங்களை 15 bps அதிகரித்துள்ளது.
180 முதல் 210 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 4.40%லிருந்து 4.55% ஆக எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான முதிர்வு கொண்ட நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 5.30% லிருந்து 5.45% ஆக உயர்த்தியுள்ளது.
2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.35% இலிருந்து 5.50% ஆகவும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.45% லிருந்து 5.60% ஆகவும் அதிகரித்துள்ளது. எஸ்பிஐ 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 5.50% லிருந்து 5.65% ஆக உயர்த்தியுள்ளது.
இதேபோல், "SBI Wecare" டெபாசிட் திட்டம் செப்டம்பர் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.