/tamil-ie/media/media_files/uploads/2019/11/sbi-1-2.jpg)
எஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்கில், மாதந்தோறும் போதிய பேலன்சை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( எஸ்பிஐ), வங்கி சேமிப்பு கணக்கில் போதிய பேலன்சை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த அபராதம், வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் பகுதியின் அடிப்படையில், மெட்ரோ, அர்பன், செமி அர்பன் மற்றும் கிராமப்பகுதிகள் என நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், போதிய பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்துக்கு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சேவையையும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கு துவங்குபவர்களுக்கு போதிய பேலன்ஸ் பராமரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.