sbi net bankingonline : பணத்தை ரொக்கமாக பரிமாற்றுவதற்குப் பதிலாக RTGS, NEFT ஆகிய ஆன்லைன் முறைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள்? இதோ இந்த தகவல் உங்களுக்கு தான்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வருகிறது.
இந்தக் கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதமே ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்தது. இதன் மூலம் யோனோ (Yono) மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்.
ரிசர்வ் வங்கி என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு வங்கிகளிடம் குறைந்தபட்ச கட்டணம் பெற்றுவருகிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தாங்கள் வழங்கும் கட்டணத்தை ஈடுசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன.
தி டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
நீங்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை! எஸ்பிஐ -யில் இனி பணம் எடுப்பது போடுவது ஈஸியோ ஈஸி
அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண ரத்து மூலம் கிடைக்கும் பலனை வழங்க வேண்டும் அறிவுருத்தப்பட்டது. அந்த வகையில் எஸ்பிஐ முதலாவதாக இந்த முடிவை எடுத்து அதை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கும் கொண்டு வந்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தவித பயமும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை செய்துக் கொள்ளலாம்.