/tamil-ie/media/media_files/uploads/2019/04/442226_5511702_2_updates-2.jpg)
வங்கியின் உத்தரவுப்படி 28.02.20க்கு முன்னர் KYC இணங்காத / தாமதமான கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sbi netbanking online : எஸ்பிஐ வங்கி பொதுத்துறை வங்கிகளில் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புகள் மாற்றங்கள் எஸ்பிஐ வங்கியால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதுக் குறித்த முழு விபரங்களை தினமும் உங்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். அந்த வகையில் இன்று நீங்கள் எஸ்பிஐ-யில் அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ யில் மாற்றம் செய்யப்பட்ட மிக முக்கியமான தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என எஸ்பிஐ-யின் அறிவிப்பு தான் அது.
எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும். கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்.,களில் கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய கட்டண முறை, அக்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் பலம் இது தெரியாமல் பழைய கட்டண முறையை நினைத்து இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.