Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

அக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே

SBI New Rules From October 1 : அக்டோபர் 1 முதல், போதுமான இருப்பில்லாதால் நிராகரிக்கப்படும்  ஏடிஎம்  பரிவர்த்தனைக்கு   ரூ.20 ப்ளஸ் ஜிஎஸ்டி தொகையையும் வசூலிக்கும்.

Written by WebDesk

SBI New Rules From October 1 : அக்டோபர் 1 முதல், போதுமான இருப்பில்லாதால் நிராகரிக்கப்படும்  ஏடிஎம்  பரிவர்த்தனைக்கு   ரூ.20 ப்ளஸ் ஜிஎஸ்டி தொகையையும் வசூலிக்கும்.

author-image
WebDesk
15 Sep 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 15 Sep 2019 12:36 IST

Follow Us

New Update
state bank of india Nrew Rules From October 1 - newatm charge . insufficient balance new charge

state bank of india Nrew Rules From October 1 - newatm charge . insufficient balance new charge

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அக்டோபர் 1, 2019 முதல் தனது சேவைக் கட்டணங்களைச் சற்று மாற்றம்  செய்து அமல்படுத்தவிருக்கிறது.

Advertisment

மாதாந்திர சராசரி இருப்பு (MAB) ஐ பராமரிக்காததால் விதிக்கப்படும் கட்டணங்களை கிட்டத்தட்ட 80% குறைக்கவுள்ளது,மேலும் ஒரு மாதத்தில் 8-10 முறை ஏடிஎம்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பண பரிவர்த்தனைகளையும் வழங்க முடிவு செய்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

மாதந்திர பராமரிப்புத் தொகை:

தற்போது, மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திரம் குறைந்தது ரூ .5,000 மற்றும் ரூ .3000 முறையே பராமரிக்க வேண்டும். அக்டோபர் 1 முதல், இந்த குறைந்தபட்ச இருப்பு மெட்ரோ  நகர்ப்புற பகுதி என இரண்டு ரூ .3,000 ஆக மாற்றப் பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச தொகையை பராமரிக்க இல்லை என்றால் முன்போலவே  அபராதத் தொகை விதிக்கப்படும். இருப்பினும் இந்த அபராதம் ரூ .80 ல் இருந்து ரூ .15 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதே சிறப்பம்சமாகும்.

Advertisment
Advertisements

மேலும், கீழ் சொல்லப்படும் வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்கள் இந்த மாதந்திர பராமரிப்புத் தேவைகளில் இருந்து விடிவிக்கப் படுகிறார்கள் - சம்பள தொகுப்பு கணக்குகள், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு ,சிறு மற்றும் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகள், பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லி உதான் கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூக பாதுகாப்பு நல சலுகைகளைப் பெறுபவர்கள், 21 வயது வரையிலான மாணவர்களுக்கான கணக்குகள்.

புதிய ஏடிஎம் கட்டண அமைப்பு: 

வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று பரிவர்த்தனைகள் உட்பட எட்டு இலவச பரிவர்த்தனைகளை வரும் அக்டோபர் ஒன்றில் இருந்து பெறுவார்கள் . பெருநகரங்களில் அல்லாத இடத்தில் அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் 10 இலவச பரிவர்த்தனைகளைப் பெறுகிறார்கள், இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஐந்து.

இந்த வரம்பைத் தாண்டிய கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ அபராதமாக ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி ₹ 20  என ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கும்.

அக்டோபர் 1 முதல், போதுமான இருப்பில்லாதால் நிராகரிக்கப்படும்  ஏடிஎம்  பரிவர்த்தனைக்கு  ரூ.20 ப்ளஸ் ஜிஎஸ்டி தொகையையும் வசூலிக்கும்.

சம்பள கணக்குகளுக்கு ஸ்டேட் வங்கி குழு (எஸ்.பி.ஜி) ஏடிஎம்கள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில்  இலவச வரம்பற்ற பரிவர்த்தனைகளை வழங்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு

publive-image

 

State Bank Of India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!