Advertisment

எஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க! வட்டி முழு விவரம்

SBI Moratorium Extension: கடன் தவணை செலுத்துவதை நிறுத்தும் செயல்முறையை எஸ்பிஐ எளிதாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
emi,sbi loan emi moratorium extended,SBI loan EMI moratorium news,auto loans,state bank of india,SBI loan EMI moratorium extension,coronavirus,home loans,SBI,EMI moratorium, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

SBI Moratorium, SBI Moratorium Extension, SBI Extends Moratorium, sbi loan emi moratorium, SBI loan EMI moratorium news, எஸ்பிஐ, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடன் தவணை

SBI News In Tamil: இந்திய ரிசர்வ் வங்கி கடன் தவணை கட்டுவதற்கு வழங்கிய அவகாசத்தை மூன்று மாதங்கள் அதாவது 31 ஆகஸ்ட் 2020 வரை நீட்டித்துள்ளது. முந்தைய மூன்று மாத கால அவகாசம் மே 31 உடன் முடிவடைகிறது. இது கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாத காலம் அதாவது மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31 2020 வரை வழங்கியுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பாரத ஸ்டேட் வங்கி கடன் கணக்கு வைத்துள்ள அனைத்து தகுதியான வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது கோரிக்கைக்காக காத்திருக்காமல், தானாகவே கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

SBI Loan EMI Moratorium Extension: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடன் தவணை அவகாசம்

கடன் தவணை செலுத்துவதை நிறுத்தும் செயல்முறையை எஸ்பிஐ எளிதாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 85 லட்சம் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களிடம் அவர்களின் கருத்தை அறிய குறுஞ்செய்தி (SMS) மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகள்

கடன் தவணை செலுத்துவதை தள்ளிப்போட விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு

எந்த நடவடிக்கையும் தேவை இல்லை. அவர்கள் தொடர்ந்து கடன் தவணையை வழக்கம் போல் செலுத்தலாம்.

கடன் தவணை செலுத்துவதை தள்ளி போட விரும்பும் வாடிக்கையாளர்கள்

Standing Instruction : SMS Reply to VMN என்று குறுஞ்செய்தி கிடைத்ததிலிருந்து 5 நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.

NACH: SMS Reply , (Where 1234 is the last 4 digits of their loan A/c no) to VMN என்று குறுஞ்செய்தி கிடைத்ததிலிருந்து 5 நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.

கடன் தவணையை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாக்கம்

அவகாச காலத்தில் கடனில் நிலுவையில் உள்ள பகுதிக்கு வட்டி தொடர்ந்து சேரும். திருப்பிச் செலுத்தும் காலத்தின் ஒத்திவைப்பின் தாக்கம் கீழே விளக்கப்பட்டுள்ளது:

வாகன கடனில் ஏற்படும் தாக்கம்

ஏற்கனவே 3 மாதங்கள் கடன் தவணையை ஒத்திப் போட்ட பின் மீண்டும் 3 மாதங்களுக்கு ஒத்திப்போட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு: 54 மாதங்கள் மீதமுள்ள முதிர்வுடன் ரூபாய் 6 லட்சம் கடனுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டி ரூபாய் 36,000/- அதாவது கூடுதலாக 3 மாத தவணை தொகைக்கு சமமானது.

முதல் முறையாக கடன் தவணை செலுத்துவதை ஒத்திப்போட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு : 54 மாதங்கள் மீதமுள்ள முதிர்வுடன் ரூபாய் 6 லட்சம் கடனுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டி உத்தேசமாக ரூபாய் 19,000/-, இது 1.5 மாதம் கூடுதல் கடன் தவணை செலுத்தும் தொகைக்கு சமமானது.

வீட்டு கடனில் ஏற்படும் தாக்கம்

ஏற்கனவே 3 மாதங்கள் கடன் தவணையை ஒத்திப் போட்ட பின் மீண்டும் 3 மாதங்களுக்கு ஒத்திப்போட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு: 15 வருடங்கள் மீதமுள்ள முதிர்வுடன் ரூபாய் 30 லட்சம் கடனுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டி உத்தேசமாக ரூபாய் 4.54, கூடுதலாக 16 மாத தவணைகள் செலுத்துவதற்கு சமமானது.

முதல் முறையாக கடன் தவணை செலுத்துவதை ஒத்திப்போட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு : 15 வருடங்கள் மீதமுள்ள முதிர்வுடன் ரூபாய் 30 லட்சம் கடனுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டி உத்தேசமாக ரூபாய் 2.34 லடசம், இது கூடுதலாக 8 மாத தவணை செலுத்துவதற்கு சமமானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment