/tamil-ie/media/media_files/uploads/2018/12/idea-13.jpg)
sbi rules
sbi rules : இந்தியாவிலுள்ள அரசுடைமை வங்கிகளில் முதன்மையாக திகழும் எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
நகரங்களில் வசிக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தது ரூ.3000 இருக்க வேண்டும் என்றும், எஸ்பிஐ ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுத்தால் அபராதம் என்றும், மற்ற வங்கிகள் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தாலும் அபராதம் என பல்வேறு விதிமுறைகளை நடைமுறையில் வைத்துள்ளது.
அதே போல், எஸ்பிஐ வங்கிகளின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட்
கார்டுகளை பயன்படுத்துபவர்கள் இனிமேல் நாள் ஒன்றுக்கு ரூ.20000 மட்டுமே பணம் எடுக்க முடியும். முன்னதாக ரூ.40000-த்தை டெபிட் கார்டு பயன்படுத்துவோர் எடுக்கலாம் என்ற முறை அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கியில் பணத்தை சேமிக்கிறீர்களா? உங்களுக்கு வங்கி தரும் வட்டி இதுதான்!
மேலும் டெபிட் கார்டு வழியாக தினமும் அதிக பணம் எடுக்க விரும்புவர்கள் எஸ்பிஐ-யின் உயர்வரம்பு கொண்ட டெபிட் கார்டுகளுக்கு மாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.