Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

ரூ.295-ஐ பிடித்த எஸ்.பி.ஐ., திரும்ப கிடைக்குமா? உண்மை என்ன?

எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 பிடிக்கப்பட்டிருக்கும். அது ஏன் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

Written by WebDesk

எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 பிடிக்கப்பட்டிருக்கும். அது ஏன் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
10 Mar 2023 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 10 Mar 2023 13:49 IST

Follow Us

New Update
No ID proof requisition slip needed to exchange Rs 2000 notes says SBI

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

SBI Saving Account ALERT: பாரத ஸ்டேட் வங்கி (SBI) நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். இது உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலும் இயங்கி வருகிறது. மேலும், நாட்டின் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு வெற்றிகரமாக உதவுகிறது.

Advertisment

இந்த நிலையில் தற்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்பட்டதாகவும், அது திரும்ப வரவு வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்கள், பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் வங்கி ஏன் பணத்தைக் கழித்தது என்று கவலைப்படுகிறார்கள். நீங்களும் இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தால், உங்களுக்கான பதில் இதோ.

publive-image
Advertisment
Advertisements

உண்மையில் இந்தப் பணம்  நாச் (NACH) விதிகளின்படி கழிக்கப்பட்டுள்ளது. நாச் எனப்படும் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அல்லது NPCI மூலம் அவ்வப்போது பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.

இந்த NACH ஆனது உங்கள் கணக்கிலிருந்து EMIகளை தானாக செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் EMIயில் எதையாவது வாங்கும்போதோ அல்லது கடன் வாங்கும்போதோ, அந்தத் தொகை உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் கழிக்கப்படும்,

மேலும் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே உங்கள் கணக்கில் போதுமான இருப்பை வைத்திருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி EMI கழிக்கப்பட வேண்டுமென்றால், 4 ஆம் தேதி முதல் அந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.

நீங்கள் போதுமான இருப்பை பராமரிக்கத் தவறினால், வங்கி ரூ. 250 அபராதம் விதிக்கிறது. இந்த அபராதத்துக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அந்த வகையில், ரூ.250ல் 18%= ரூ. 45. மொத்தத் தொகை ரூ. 250 + ரூ. 45 = ரூ. 295 ஆகும். அதாவது, அபராதமாக உங்கள் கணக்கிலிருந்து ரூ.295ஐ வங்கி பிடித்தம் செய்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Business Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!