SBI Saving Account ALERT: பாரத ஸ்டேட் வங்கி (SBI) நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். இது உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலும் இயங்கி வருகிறது. மேலும், நாட்டின் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு வெற்றிகரமாக உதவுகிறது.
இந்த நிலையில் தற்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்பட்டதாகவும், அது திரும்ப வரவு வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்கள், பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் வங்கி ஏன் பணத்தைக் கழித்தது என்று கவலைப்படுகிறார்கள். நீங்களும் இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தால், உங்களுக்கான பதில் இதோ.

உண்மையில் இந்தப் பணம் நாச் (NACH) விதிகளின்படி கழிக்கப்பட்டுள்ளது. நாச் எனப்படும் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அல்லது NPCI மூலம் அவ்வப்போது பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.
இந்த NACH ஆனது உங்கள் கணக்கிலிருந்து EMIகளை தானாக செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் EMIயில் எதையாவது வாங்கும்போதோ அல்லது கடன் வாங்கும்போதோ, அந்தத் தொகை உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் கழிக்கப்படும்,
மேலும் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே உங்கள் கணக்கில் போதுமான இருப்பை வைத்திருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி EMI கழிக்கப்பட வேண்டுமென்றால், 4 ஆம் தேதி முதல் அந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.
நீங்கள் போதுமான இருப்பை பராமரிக்கத் தவறினால், வங்கி ரூ. 250 அபராதம் விதிக்கிறது. இந்த அபராதத்துக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், ரூ.250ல் 18%= ரூ. 45. மொத்தத் தொகை ரூ. 250 + ரூ. 45 = ரூ. 295 ஆகும். அதாவது, அபராதமாக உங்கள் கணக்கிலிருந்து ரூ.295ஐ வங்கி பிடித்தம் செய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/