வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சலுகை: பங்குச்சந்தையில் முதலீடுகளை ஈர்க்க செபி புதிய முயற்சி

பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகளை எளிதாக்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர தானியங்கி அனுமதி வழங்கும் புதிய திட்டத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இது SWAGAT-FI என்ற பெயரில் அழைக்கப்படும்.

பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகளை எளிதாக்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர தானியங்கி அனுமதி வழங்கும் புதிய திட்டத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இது SWAGAT-FI என்ற பெயரில் அழைக்கப்படும்.

author-image
WebDesk
New Update
Sebi board meeting outcom

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சலுகை: பங்குச்சந்தையில் முதலீடுகளை ஈர்க்க செபி புதிய முயற்சி

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு (FPIs) இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கு ஒற்றைச் சாளர ஆட்டோமெட்டிக் அனுமதி (Single Automatic Window) வழங்கும் புதிய திட்டத்திற்கு இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றி வரும் நிலையில் வெளியாகியுள்ளது. ஜூலை முதல் இதுவரை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ரூ.63,516 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

முக்கிய அம்சங்கள்

Advertisment

புதிய கட்டமைப்பு: SWAGAT-FI (Single Window Automatic & Generalised Access for Trusted Foreign Investors) என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும். இது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு துணிகர முதலீட்டாளர்களுக்கு (FVCIs) ஒற்றைச் சாளர அனுமதி வழங்கும்.

எளிமையான செயல்முறை: இந்தத் திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு அணுகலை எளிதாக்குவதுடன், பல முதலீட்டு வழிகளில் சீரான பதிவு செயல்முறையை உருவாக்கும். இதனால், ஒழுங்குமுறை சிக்கல்கள் குறையும், இணக்கம் எளிமையாகும், மற்றும் இந்தியா முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக மாறும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தகுதியுள்ள முதலீட்டாளர்கள்: அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதியங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் போன்ற முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட பொது சில்லறை நிதியங்கள் (Public Retail Funds) இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெறுவார்கள். ஏற்கனவே உள்ள தகுதிவாய்ந்த வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்த புதிய நிலைக்கு மாற முடியும். இந்தத் திட்டம் 6 மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

பிற முக்கிய முடிவுகள்

Advertisment
Advertisements

செபியின் தலைவர் துஹின் காந்தா பாண்டே, வாரியக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் மற்ற முடிவுகளையும் தெரிவித்தார்:

ஐ.பி.ஓ விதிமுறைகள்: ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரையிலான சந்தை மூலதனம் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு, பொது பங்கு வெளியீட்டின் குறைந்தபட்ச அளவை 2.75% ஆக செபி பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு மத்திய அரசு எடுக்கும் என்றார்.

மத்தியஸ்த நிறுவனங்கள்: சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் (MIIs) நிர்வாகத்தை மேம்படுத்த, 2 நிர்வாக இயக்குநர்களை (Executive Directors) நியமிக்க செபி ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.பி.ஓ-வில் ஒதுக்கீடு: ஐபிஓ-வில் பெரிய முதலீட்டாளர்களுக்கான மொத்த ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 3-ல் ஒரு பங்கு உள்நாட்டு பரஸ்பர நிதியங்களுக்கும், மீதமுள்ளவை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்களுக்கும் ஒதுக்கப்படும்.

பரஸ்பர நிதி: முதலீட்டாளர் பாதுகாப்பை மேம்படுத்த, பரஸ்பர நிதியங்களுக்கான அதிகபட்ச வெளியேற்றக் கட்டணம் (Exit Load) 5%-ல் இருந்து 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு நகரங்களிலிருந்து பரஸ்பர நிதிக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் விநியோகஸ்தர்களுக்கான ஊக்கத் தொகையும் திருத்தப்பட்டுள்ளது.

ஏ.ஐ.எஃப். திட்டங்கள்: அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களுக்காக மட்டும் (AI-only schemes) ஒரு தனிப்பட்ட வகை மாற்று முதலீட்டு நிதி (AIF) திட்டங்களை அறிமுகப்படுத்தவும் செபி ஒப்புதல் அளித்துள்ளது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: