Advertisment

மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீத வட்டி.. எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புகளுக்கு, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற முன்னணி வங்கிகளை விட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டியை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
Senior Citizen Fixed Deposit interest rate

எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள்

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வைப்புகளுக்கு 9 சதவீத வட்டியை வழங்குகின்றது.

இது தவிர உஜ்ஜிவல் ஸ்மால் ஃபைனான்ஸ், உத்கர்ஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் மற்றும் இஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை மூத்த குடிமக்கள் வைப்பு நிதிகளுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குகின்றன.

Advertisment

இந்த ஸ்மால் வங்கிகள், மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புகளுக்கு, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற முன்னணி வங்கிகளை விட அதிக வட்டியை வழங்குகின்றன.

எனினும், ரிசர்வ் வங்கியின் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிகளின்படி, ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகள் மட்டுமே காப்பீடு செய்யப்படுகின்றன.

இந்த வரம்பு அசல் மற்றும் வட்டித் தொகைகள் இரண்டையும் உள்ளடக்கியது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு ஷெட்யூல் செய்யப்பட்ட வங்கி திவாலாகிவிட்டாலோ அல்லது மூடப்பட்டாலும், டெபாசிட் செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை திரும்ப கிடைக்கும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ தளத்தில், “ஒவ்வொரு வங்கியிலும் டெபாசிட் செய்பவர் அதிகபட்சமாக ₹ 5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவும் உள்ளது. வங்கிகள் இப்போது பணத்தை மூழ்கடித்தாலும் 90 நாட்களுக்குள் டெபாசிட் செய்பவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.

பொதுவாக, நிலையான வைப்புத் திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வைப்பாளர்கள் முதலீடு செய்வதற்கு முன் வங்கியின் நற்சான்றிதழையும் பார்க்க வேண்டும்.

நிலையான வைப்புத் திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வைப்பாளர்கள் முதலீடு செய்வதற்கு முன் வங்கியின் நற்சான்றிதழையும் பார்க்க வேண்டும்.

மேலும், அசல் மற்றும் வட்டித் தொகை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இல்லாத வங்கி எஃப்டியில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு FD திட்டத்தில் அதிக முதலீடு செய்ய விரும்பினால், ரூ. 5 லட்சம் காப்பீட்டு வரம்பை மனதில் வைத்து பல வங்கிகளில் பல FD களை வைத்திருப்பது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment