/tamil-ie/media/media_files/uploads/2022/07/markets.png)
மும்பை பங்குச் சந்தை
பலவீனமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 62,626 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 0.3 சதவீதம் 18,646 ஆகவும் முடிவடைந்தன.
டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் நஷ்டம் அடைந்தன. அதே சமயம் ஹிண்டால்கோ நிஃப்டியில் நஷ்டமடைந்தது.
மறுபுறம், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி, பவர்கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் எல்&டி ஆகிய இரண்டு குறியீடுகளிலும் சிறந்த செயல்திறன் கொண்ட பங்குகளாக காணப்பட்டன.
இந்நிலையில், என்எஸ்இ மிட்கேப் 100 0.46 சதவீதம் குறைந்து, ஸ்மால்கேப் குறியீடு பிளாட் ஆனது.
நிஃப்டி ஐடி பங்குகள்
நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் இன்ட்ராடேயில் 1.7% சரிந்துள்ளது, LTIMindtree, Coforge மற்றும் Persistent Systems ஆகியவை முறையே 3%க்கு மேல் குறைந்து, முன்னணியில் காணப்பட்டன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு இன்ட்ரா-டே வர்த்தகத்தில் அதிகபட்சமாக 82.34 ஐ தொட்டது.
USDINR முன்னோக்கி பிரீமியம் 2011 முதல் மிகக் குறைந்த அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது
ஹெச்டிஎஃப்சியில், எல்ஐசி முதலீடு
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா டிசம்பர் 2 அன்று திறந்த சந்தை பரிவர்த்தனைகள் மூலம் HDFC இல் கூடுதலாக 2.14 லட்சம் பங்குகளை (0.012%) வாங்கியது. இதன் மூலம், கார்ப்பரேஷனில் எல்ஐசியின் பங்கு 4.991% இல் இருந்து 5.003% ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.