Advertisment

சன் பார்மா பங்குகள் உயர்வு: இந்திய சந்தைகளில் 3வது நாளாக தொடரும் ஏற்றம்!

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் பெஞ்ச்மார்க் குறியீடு 152.12 புள்ளிகள் அல்லது 0.23 சதவீதம் உயர்ந்து 65,780.26 இல் நிலைத்தது.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

பங்குச் சந்தைகள் 3வது நாளாக இன்றும் உயர்ந்து காணப்பட்டன.

சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமான போக்குகளுக்கு மத்தியில், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய மார்க்கெட் ஹெவிவெயிட்கள் லாபம் அடைந்தன.

Advertisment

இதனால், பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் பெஞ்ச்மார்க் குறியீடு 152.12 புள்ளிகள் அல்லது 0.23 சதவீதம் உயர்ந்து 65,780.26 இல் நிலைத்தது.

மதியம் இது 203.56 புள்ளிகள் அல்லது 0.31 சதவீதம் அதிகரித்து 65,831.70 ஆக இருந்தது. நிஃப்டி 46.10 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் உயர்ந்து 19,574.90-ல் முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில், சன் பார்மா, ஐடிசி, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, இன்ஃபோசிஸ், எல்&டி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டியன.

அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி, ஹெச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் என்டிபிசி ஆகியவை பின்தங்கின.

ஜிஎஸ்டி வசூல்

ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியை எட்டியது. மேலும் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் சாதனை படைத்தது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.62 சதவீதம் குறைந்து 88.45 அமெரிக்க டாலராக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment