/tamil-ie/media/media_files/uploads/2018/12/higher-education-8.jpg)
இன்றைய சென்செக்ஸ்
இன்றைய சென்செக்ஸ்: 5 மாநில சட்டசபை தேர்தலின் வாகுப்பதிவு இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய பங்கு சந்தைகளின் புள்ளிகள் சரிந்தன.
இன்றைய சென்செக்ஸ் நிலவரம்:
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் பாஜக ஆட்சி புரிந்த வந்த 3 மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடனே தொடங்கின. முதலில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்றைய தினம் பதவி விலகிய காரணத்தினால் இன்றைய தினம் வர்த்தகம், மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 34,584.13இல் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,350.05இல் தொடங்கியது.
முதல் சில நிமிடங்களில் சென்செக்ஸ் 501.66புள்ளிகள் (1.43சதவீதம் ) குறைந்து 34,458.60 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 131.55 புள்ளிகள் சரிந்து (1.25 சதவீதம்) குறைந்து 10,356.85 ஆக இருந்தது.
இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 505.52 புள்ளிகள் என 1.45 சதவீதம் சரிந்து 34,450.83 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடு 142.65 புள்ளிகள் என 1.36 சதவீதம் சரிந்து 10,357.70 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை பெரும் சரிவை சந்திருப்பதால் முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.