/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
இன்றைய வாரத்தின் வாரத்தின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிந்து 62,181.67 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தையும் தன் பங்குக்கு 112.75 புள்ளிகள் சரிந்து 18456.60 என காணப்பட்டது.
30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, நெஸ்லே, எஸ்பிஐ, சன் பார்மா, டைடன் அண்ட் கோ உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், பிபிசிஎல், பிரிட்டானியா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் லாபமும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
இந்நிலையில், நிஃப்டி மிட்கேப் 50 58 புள்ளிகளுடன் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தது. இதற்கிடையில், நிஃப்டி பேங்க், நிஃப்டி எஃப்எம்சிஜி, நிஃப்டி பார்மா மற்றும் நிஃப்டி ஹெல்த்கேர் மட்டுமே லாபம் ஈட்டின.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.