இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50, இன்று சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
எட்டு நாள் உயர்வுக்கு பிறகு இன்று வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில், பிஎஸ்இ சென்செக்ஸ் 415 புள்ளிகள் சரிந்து 62,868 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி நேற்றைய முடிவில் 0.66% புள்ளிகள் குறைந்து 18,696 ஆகவும் முடிவடைந்தது.
ஆனால் நிஃப்டி மிட்கேப் 0.88% மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் 0.6% உயர்ந்தன. நிஃப்டியின் அனைத்து துறை குறியீடுகளும் லாபம் மற்றும் இழப்புகளுக்கு இடையே மாறியது.
நிஃப்டி ஆயில் & கேஸ் சமமாக முடிந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி மீடியா ஆகியவை நாளின் அதிக லாபம் ஈட்டியுள்ளன. நிஃப்டி ஆட்டோ மற்றும் நிஃப்டி எஃப்எம்சிஜி ஆகியவை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தன.
சிறந்த பங்குகள்
டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மாருதி ஆகியவை வெள்ளிக்கிழமை மிகவும் சுறுசுறுப்பான நிஃப்டி 50 பங்குகளில் இருந்தன.
நிஃப்டி உயர்வு, சரிவு
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி குறியீட்டில், அப்பல்லோ மருத்துவமனைகள், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, கிராசிம் மற்றும் டெக்எம் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
குறிப்பாக அப்பல்லோ மருத்துவமனைகள் கிட்டத்தட்ட 1.87% உயர்ந்தன.
மறுபுறம், ஐச்சர் மோட்டார்ஸ், எம்&எம், டாடா கன்சூமர், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை மிகப் பெரிய அளவில் பின்தங்கின.ஐஷர் மோட்டார்ஸ் 3.1% சரிந்து வர்த்தகமானது.
தங்கம் விலை உயர வாய்ப்பு?
வாஷிங்டனில் உள்ள ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பேச்சுக்கு பின்னர் சந்தையில் எதிர்மறையான வர்த்தகங்கள் நடந்தன.
இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட சொத்துக்களில் எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.