Advertisment

20 ஆயிரத்தை கடந்த நிஃப்டி: வரலாற்று உச்சம்

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.38% உயர்ந்து 20,070 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் அதிகரித்து 67,466.99 ஆகவும் முடிவடைந்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) புதிய உச்சம் அடைந்தன.

Share Market News Today : இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) புதிய உச்சம் அடைந்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.38% உயர்ந்து 20,070 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் அதிகரித்து 67,466.99 ஆகவும் முடிவடைந்தன.

Advertisment

பரந்த சந்தை குறியீடுகளில் முன்னேற்றம் அடைந்து முன்னணியில் இருந்தன. வங்கி நிஃப்டி 398.10 புள்ளிகள் உயர்ந்து 45,909.45 புள்ளிகளில் நிலைத்தது.

பொதுத்துறை வங்கி, மீடியா மற்றும் பார்மா பங்குகள் தலைமையிலான லாபத்துடன் வணிகமாகின. அதேபோல், ஐ.டி. ( IT) மற்றும் ஆட்டோ பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன. சந்தையில் ஒப்பீட்டு ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள், என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை நேர்மறையாக முடித்தன.

கோல் இந்தியா பங்குகள் உயர்வு

அடுத்த சில ஆண்டுகளில் 61 எஃப்எம்சி திட்டங்களில் சுமார் ரூ.24,750 கோடி மூலதன முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்ததன் காரணமாக, கோல் இந்தியா பங்கு விலை புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தின் போது 3.42% உயர்ந்தது. சுற்றுச்சூழல் நட்பு நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment